Tuesday, September 24, 2013

நக்கீரர்!



தமிழகம் சேர, சோழ, பாண்டிய நாடுகள் என்னும் பெயரால் முத்தமிழ் நாடாக விளங்கியது. இவற்றுள் தமிழ் வளர்த்த சங்கங்கள் அமைத்துப் புகழ் பெற்ற நாடு பாண்டிய நாடாகும். அதன் தலைநகரமே மதுரை மாநகரம். அந்நகரத்தில் அமைக்கப் பெற்று விளங்கிய தமிழ்ச் சங்கத்தில் வீற்றிருந்து தமிழை ஆராய்ச்சி செய்த புலவர்கள் சங்கப்புலவர்கள் என்ற பெருமையைப் பெற்றவர்களாகும்.

இத்தமிழ்ச் சங்கத்தில் தமிழை ஆராய்ந்தவர்களுள் நக்கீரரும் ஒருவர். தலைப்புலவர்களான கபிலர், பரணர், நக்கீரர் மூவருமே சமமனான புலமை பெற்றிருந்த போதும் இவர்கள் ஆழ்ந்த நட்புக் கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். அந்நட்பினைச் சிறப்பிக்கும் வகையில் "கபில பரண நக்கீரர்" என்று அழைக்கப்பட்டனர். எனினும், கபிலர், பரணர் இவர்களை விட நக்கீரர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்.

No comments:

Post a Comment

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...