Friday, September 7, 2012

வாயுவை கவனிப்பது எப்படி?



உடலில் இருகின்ற வாயுவை நம்மால் கவனிக்க இயலுமா?, எனவே மூக்கு நுனியில் வெளியேறும் வாயுவை , உள் இழுக்கப்படும் வாயுவை கவனிக்க வேண்டியதாகும் , நீண்ட மூச்சி இழுத்து நிதானமாக வெளிவிட சுவாசப்பை முயற்சி செய்வதை கவனிக்க வேண்டி உள்ளது . மூச்சி விடுவதை கவனிக்க வேண்டுமென்றால் மனதை சும்மா இரு என்று அதட்ட வேண்டி உள்ளது .அப்படி கவனிக்க ஒரு தனி இடம் வேண்டி உள்ளது.

அப்படி தேடி போய் உட்கார்ந்து இடையறாது மூச்சை கவனித்து கவனித்து , மூச்சை கவனிப்பதே மனதின் வேலை ஆகி , அதனால் மனம் அமைதியாகி ,மனம் அமைதியானால் மனம் மேலும் பண்பட்டு, மனம் பண்பட்டதால் மூச்சி இன்னும் இழை ஆகி, மூச்சி இழை ஆனதால் மனம் சுருண்டு கிடக்க , நான் என்ற இருப்பு மட்டும் தெரிய வர ... நான் என்ற இருப்பு தெரிய வரும் போது... உள்ளுக்குள் வேறு ஒரு விசயம் தென் படும் , சில கணங்கள் சகலமும் நின்று போய் வேறு ஒரு காட்சி தென்பட்டு மறுபடியும் மூச்சை வேகமாக இழுத்து விடும் போது அது கபாலத்தில் போய் தாக்கும் . கபாலத்தில் இருகின்ற நந்தி என்கின்ற ஒரு ஆரஞ்சி சுளை நீர் பையில் பிறன வாயு நிரம்ப , அந்த
இடத்தில் சக்தி துண்டப்பட , அது விழித்தெழ அந்த சுளையில் இருந்து வழியும் அமுத சுரபி இதயத்தை தொட , விருத்தரும் மேனியும் சிவந்திடும்.

உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருதினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்த தரும் பாலரவீர் , மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம்அம்மை பாதம் உண்மையே

No comments:

Post a Comment

காந்தியும் பகத்சிங்கும்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...