Tuesday, December 10, 2013

குபேர பூஜையின் சிறப்பு!




தீபாவளி அன்றோ, அதற்கு மறுநாளோ, குபேர பூஜை நடத்த ஏற்ற நாட்கள். இந்த இனிய நாளில் குபேரனை வணங்கினால், செல்வ சிறப்பு தங்கியிருக்கும் என்பது ஐதீகம். உழைப்பவனை நோக்கியே குபேரன் அடியெடுத்து வைக்கிறான்.

குபேரனின் இரண்டு பக்கங்களிலும் சங்கநிதி, பதுமநிதி என்ற தெய்வங்கள் இருக்கின்றனர். இவர்கள் மகாலட்சுமியின் அஷ்ட சக்திகளில் இருவர். இவர்கள் இருவரிடமும் ஏராளமான பொருட் செல்வம் இருக்கிறது. தன் பொருட்களை இவர்களிடம் ஒப்படைத்து வைத்திருக்கிறார் குபேரன். குபேரனை வணங்கும்போது இந்த சக்திகளையும் வணங்க வேண்டும்.

ராவணனின் சகோதரர் குபேரன். மிகச் சிறந்த சிவபக்தர். இதன் காரணமாகவே, குபேரனை வடக்கு திசைக்கு அதிபதியாக நியமித்து, குபேர பட்டணம் என்ற நகரையும் அமைத்துக் கொடுத்தார் சிவபெருமான். இந்த நகரில் உள்ள அழகாபுரம் என்ற அரண்மனை மண்டபத்தில் தாமரைப்பூ, பஞ்சு மெத்தை ஆகியவற்றின் மீது மீனாசனத்தில் அமர்ந்தார் குபேரன். ஒரு கை அபய முத்திரை காட்டி இருக்கும். கஷ்டப்படும் காலத்தில் கொடுத்து உதவுவதே அபய முத்திரையின் தத்துவம்.

குபேரனின் தலையில் தங்கக் கிரீடம் சூட்டப்பட்டிருக்கும். முத்துக்குடையின் கீழ் இவர் அமர்ந்திருப்பார். சங்க நிதியின் கையில் வலம்புரி சங்கு இருக்கும். வலம்புரி சங்கு செல்வத்தின் அடையாளம், பதும நிதியின் கையில் தாமரை மலர் இருக்கும். இவர் பரந்து விரிந்த கல்வி அறிவை தருபவர். கல்வியும், செல்வமும் இணைந்து இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே குபேர பூஜையின் முக்கிய சிறப்பு.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...