Friday, December 27, 2013

கால் பாதங்களில் அலட்சியம் வேண்டாம் !!


சிலர் கால் பாதத்தைப் பற்றி அறவே அக்கறை எடுத்துக் கொள்வது கிடையாது . ஏன் இந்த அலட்சிய குணம். கால் பாதத்தைத் தூய்மையாக வைத்திருங்கள். இதோ உங்களுக்காக பாதத்தை பாதுகாக்க சில வழிமுறைகள்.

1. பாதத்தை பாதுகாக்க முதலில் எங்குச் சென்றாலும் காலணி அணிவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வெறுங்காலில் நடப்பதை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.

2. வாரம் ஒரு முறை உங்கள் நகங்களை வெட்டிப் பாதங்களை தூய்மையாகவும், நகங்களின் கீழ்ப்பகுதியில் அழுக்குகள் அண்டாமலும் பார்த்துக் கொள்ளவும்.

3. படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் சிறிது நேரம் உங்கள் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி பாதத்தின் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.

4. பாதங்களை அழுக்காகாமல் இருக்க வீட்டிற்குள்ளும் பஞ்சினால் ஆன காலணியை அணிந்துக் கொள்ளுங்கள்.

5. நல்ல காற்றோட்டம் உள்ள செருப்புக்களையும், காலணிகளையும் அணியுங்கள், இது உங்களின் கால்களில் புண்களை ஏற்படுத்தாமல் தவிர்க்க உதவுகிறது.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...