Friday, December 27, 2013

மாதுளை பயன்படுத்தும் விதம்


1. 15 கிராம் அளவு மாதுளம்
பிஞ்சை எடுத்து அரைத்து 200
மிலி மோரில் மூன்று வேளை வீதம்
பருகிவர
பேதி இரத்தப்பேதி நிற்கும்.
2. பழச்சாற்றை தேவைக்கேற்ப பருகிவர
பாண்டு நீங்கி உடற்பலம் தரும்.
3. இதன் பழஓட்டை நிழலில்
காயவைத்து பொடியாக்கி 5-10
கிராம் வீதம் 3 வேளை பொடித்துண்ண
பேதி வயிற்றுப்புண் நீங்கும்.
4. மாதுளம் பிஞ்சு தளிர்
இவைகளை 20 கிராம்
அளவு எடுத்து நன்கு அரைத்து பாலி
மூன்று வேளை வீதம் உண்டுவர
மேகநோய்,
வெள்ளைப்போக்கு நிற்கும்.
5. வாய்ப்புண் குணமாக இதன்
தளிரை தேவைக்கேற்ப மென்று தின்ன
குணமாகும்.
6. இதன் பழ-ஓட்டைப்
பொடித்து அதனுடன் வெந்தயம்
பொடி சமபங்கு சேர்த்து 5-8 கிராம்
வரை தினமும் 3 வேளை வீதம்
உண்டுவர மேகநோய்,
பாண்டு அடிக்கடி சிறுநீர்
செல்லுதல் ஆகியவை குணமாகும்.

No comments:

Post a Comment

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...