Wednesday, June 4, 2014

ஏழ்மை அகல, வளம் பெருக...




தாரித்ரிய து:கௌக தமோநிஹந்த்ரீ
த்வத்பாத பத்மம் மயி ஸந்திதத்ஸ்வ
தீனார்திவிச்சேதன ஹேதுபூதை:
க்ருபாகடாக்ஷைர பிஷிஞ்சமாம் ஸ்ரீ:
-
ஸ்ரீலக்ஷ்மிஹ்ருதய ஸ்தோத்திரம்

ஏழ்மையினாலும், திடீர் வறுமையினாலும் ஏற்படுகின்ற இருளடர்ந்த துக்க சூழ்நிலையைப் போக்கும் மஹாலக்ஷ்மியே நமஸ்காரம்.

தங்கள் திருப்பாதங்களை என் மீது வைத்து அருள வேண்டும் தாயே. இந்த வறியவனுடைய இந்த நிலைமைக்குக் காரணமான விஷயங்களையும், அதனால் ஏற்படக்கூடிய மன உபாதைகளையும் தீர்த்து எனக்கு வளமான வாழ்வைக் காட்டியருள்வாய் தாயே.

(இந்த ஸ்லோகத்தை வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வர, மன வெறுமை, இல்ல வறுமை எல்லாம் நீங்கி சிறப்படையலாம்).

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...