Friday, October 12, 2012

ஓரிதழ் தாமரை கற்பம்



ஏம்மாம் ஓரிதழ்த் தாமரை சமூலம் 
இணைத்து மேசூரணித்து நெய்யிற்கொள்ள  
சேமமா உடம்பில் நின்ற வேகமெல்லாம் 
சிதைந்துமே போய்விடும் சிறுநீர்தானும் 
காமமாய் குளிர்ந்துவிடும் கண் புகைச்சல் 
காமாலைவரட் சியொடு கடிய பித்தம்  
வாமமாயப் போய்விடு மண் டலந்தான் கொள்ளு 
மகத்தான ரோகம் எல்லாம் மாறிப்போமே (போகர் கற்பம் )

ஓரிதழ் தாமரை செடி முழுவதும் நிழலில் உலர்த்தி தூள் செய்து நெய்யில் கலந்து உண்டுவர உடம்பில் நோய் வேகமெல்லாம் தவிடு பொடி ஆகிவிடும் .உடல் சூடு தணித்து சிறுநீர் குளிர்ந்துவிடும் .  கண் எரிச்சல், 
காமாலை, வரட்சி, பித்தம் ஆகியவை ஒரு மண்டலம் உண்டுவர தீரும். பெரிய   நோய் கூட விலகி ஓடும் .

No comments:

Post a Comment

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...