Monday, October 29, 2012

ஒரு மனையின் நீள அகலங்கள் பற்றிய குறிப்புகள்

 

     வீடு கட்டுவது பெரிதல்ல. அது பார்ப்பதற்கு அழகாகவும் மனதை கவரும் படியும் இருக்க வேண்டும். எந்தெந்த இடத்தில் எந்ததெந்த அறைகளை அமைக்கலாம். எங்கே பூச்செடிகளை வைத்து அலங்காரம் செய்யலாம். அமைக்கும் அறைகள் எத்தனை எத்தனை அடிகளில் இருந்தால் சுபிட்சமாக இருக்கும். குடும்பம் லஷ்மி கடாட்சத்துடன் விளங்கும் என யோசித்து யோசித்து வீட்டை கட்டுகிறோம். அதை சரியாக செய்து முடிக்க வாஸ்து கலை மிகவும் உறுதுணையாக விளங்குகிறது. சிறிய வீடோ, பெரிய வீடோ அதை வாஸ்துபடி கட்டினால் எந்த வித பிரச்சனைகளும் இன்றி வாழலாம். இனி எத்தனை அடி மனைகளால் சுபிட்சம் உண்டாகும். எத்தனை அடி மனைகளால் வீண் பிரச்சனைகள் ஏற்படும் என்பதனை காண்போம்.

    மனையின் நீள அகலங்கள் (அடிகளில்)


அடிகள்   பலன்கள்
6 நன்மைகள் ஏற்படும்
7 ஏழ்மை நிலை உண்டாகும்
8 இராஜ்ஜியம்
9 மிகவும் தீயது
10 பால் சோறு உண்டு
11 வளம், புத்திர சம்பத்து
12 ஏழ்மை,குழந்தை குறைவு
13 நோய், எதிரி உண்டு
14 நித்தம் பகை, நஷ்டம்
15 நிலை, பாதித்தல்
16 செல்வமுண்டு
17 அரச அந்தஸ்து கிடைக்கும்
18 நஷ்டம் பல உண்டாகும்
19 மனைவி, மக்கள் இழப்பு
20 மகிழ்ச்சி, வளம் பெருகும்
21 நன்மை, தீமை கலந்திருக்கும்
22 எதிரி அஞ்சுவான்
23 தீராத நோய் ஏற்படும்
24 மனைவிக்கு கண்டம்
25 தெய்வ அருள் கிடைக்காது
26 ராஜபோக வாழ்க்கை அமையும்
27 வளமும்,செல்வமும் பெருகும்
28 Êசல ஐஸ்வர்யமும் உண்டாகும்
29 உற்றார் உறவினர்களால் நன்மை
30 லட்சுமி தேவியே குடியிருப்பான்
31 நற்பலன்கள் உண்டாகும்
32 இழந்த பொருட்கள் திரும்ப கிடைக்கும்
33 நற்பலன்கள் ஏற்படும்
34 வீட்டில் குடியிருக்கவே இயலாது
35 நல்ல வருமானம் கிட்டும்
36 ராஜயோக வாழ்க்கை அமையும்
37 வளமும்,மகிழ்ச்சியும் பெருகும்
38 காரியங்கள் தடைபடும்
39 ஆக்கமும்,வளர்ச்சி ஏற்படும்
40 எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும்
41 குபேரன் போல வாழ்க்கை
42 லட்சுமி கடாட்சம் ஏற்படும்
43 கெடுதி உண்டாகும்
44 கண்களில் பாதிப்பு ஏற்படும்
45 பிள்ளைகளால் நற்பலன்
46 வீட்டில் வாழ முடியாது
47 ஏழ்மையான நிலை ஏற்படும்
48 நெருப்பால் கண்டம் உண்டாகும்
49 கெட்ட ஆவிகளால் தொல்லை
50 நற்பலன்கள் அமையும்
51 வழக்குகள் ஏற்படும்
52 செல்வம் செழிக்கும்
53 வீண் செலவு அதிகரிக்கும்
54 லாபங்கள் பெருகும்
55 உறவினர்களிடையே விரோதம்
56 புத்திர பாக்கியம் சிறக்-கும்
57 பிள்ளைகளால் கெடுதி
58 வீண் விரோதம் ஏற்படும்
59 நற்பலன் உண்டாகும்
60 பொன் பொருள் சேரும்
61 பகைமை வளரும்
62 வறுமையை ஏற்படுத்தும்
63 சேமிக்கவே முடியாது
64 எல்லா வகையிலும் நன்மை
65 பெண்களால் பிரச்சனை
66 அறிவாற்றல் பெருகும்
67 மனதில் பய உணர்வு ஏற்படும்
68 திரவியங்களால் லாபம்
69 தீயால் கண்டம் ஏற்படும்
70 அன்னியரால் லாபம் உண்டாகும்
71 பாசம் அதிகரிக்கும்
72 நல்ல லாபம் பெருகும்
73 வண்டி வாகனங்களால் லாபம்
74 பெயர் புகழ் உயரும்
75 சுகமான வாழ்க்கை அமையும்
76 பிள்ளைகளால் மனகவலை
77 சுக போக வாழ்க்கை
78 புத்திர தோவும்
79 கன்று காலி விருத்தி
80 லட்சுமி கடாட்சம் உண்டாகும்
81 இடி விழுந்து நாசமடையும்
82 ரோவும் அதிகரிக்கும்
83 மரண பயம் உண்டாகும்
84 சகல பாக்கியமும் கிட்டும்
85 அரச வாழ்க்கை அமையும்
86 அதிக இம்சை ஏற்படும்
87 தண்டனை அதிகரிக்கும்
88 சகல சௌபாக்கியம் கிட்டும்
89 பல வீடு கட்டும் யோகம் உண்டு
90 சகல யோகம் உண்டாகும்
91 நல்ல கல்வி யோகம் உண்டு
92 சகல ஐஸ்வர்யமும் ஏற்படும்
93 சொந்த நாட்டில் வாழ்வான்
94 அந்நிய தேசம் போவான்
95 வசதி வாய்ப்புகள் பெருகும்
96 வெளி நாடு செல்வான்
97 கப்பல் பயணம்,வியாபாரம் ஏற்படும்
98 வெளி நாட்டிற்கு செல்வான்
99 அரசனை போல நாட்டை ஆளும் யோகம்
100 எல்லா வளமும் கிட்டும்

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...