Thursday, August 1, 2013

மூலத்திற்க்கு கஷாயம்-அகத்தியர்


தயங்காத மூலமென்ற தெல்லாம் போகும்

தேனென்ற புல்லறுகு துளிரவைத்து
செழுமையுள்ள தண்ணீரில் குடித்தாயானால்
ஊனென்ற மூலமெல்லாம் தீரும் தீரும்
உத்தமனே ஈரஞ்சு நாளில் மைந்தா
வீனென்ற மூலமெல்லாம் ஒழிந்து போகும்

                                       - அமுத கலைஞானம் 1200

பொருள்:எல்லா வகை மூல நோயும் நீங்குவதற்க்கு மருந்து சொல்கிறேன், அறுகம்புல்லை பிடிங்கி வந்து தூய்மையான தண்ணீரில் போட்டுகொதிக்க வைத்து நன்கு கொதித்ததும் அதை இறக்கி வடித்து அரை டம்ளர் வீதம் பத்து நாட்கள் காலை-மாலை உணவுக்கு முன்பு அருந்தினால் எல்லா வகை மூலமும் கண்டிப்பாக நீங்கி போகும் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...