Sunday, June 21, 2015

இந்து மத உண்மையும், கிறிஸ்தவ பொய்யும்


பூமியின் வடிவம் பற்றி விஷ்ணு புராணத்தில் அது உருண்டையானது, சூரியனைச் சுற்றிலும் காந்த விசையால் ஈர்க்கப்பட்டு கோள்கள் சுழல்கின்றன. வடக்குப் பகுதி உத்ராயணம் என்னும் கடக ரேகையும், தெற்கு பகுதி தட்சிணாயணம் என்னும் மகர ரேகையும் அமையப் பட்டு சூரியன் சஞ்சரிக்கும் காலங்கள் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஏசு என்ற மனிதன் வேதத்தில் பூமி சதுரமானது என்று சொல்லப்பட்டுள்ளது. இதனை உருண்டை வடிவமானது என்று கண்டறிந்த கலிலியோவின் சொல் அவர்களின் வேதத்திற்கு எதிரானது என்பதால் கொல்லப்பட்டார். பொய் சொன்ன ஏசுவும் கொல்லப்பட்டார். உண்மையை சொன்ன கலிலியோவும் கொல்லப்பட்டார். பொய்யைச் சொன்னவர் கடவுளாகிவிட்டார். உண்மையை சொன்னவருக்கு மரண தண்டனையை கொடுத்தார்கள்.

இதில் யாருக்கு சொர்க்கம், யாருக்கு நரகம் என்பதை நினைக்கும்போதெல்லாம் ஏசுவிடம் பேசும் ஐஏஎஸ் உமாசங்கர் கேட்டுச் சொல்ல வேண்டும். தவறான தீர்ப்பு சொன்னதால் சிவபக்தனான ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் கண்ணகி வழக்கில் தன் உயிரை விட்டான்.அதுபோல பொய்யான வேதம் சொன்ன ஏசு, நெடுஞ்செழியனைப் போல எப்படி நீதியாக நடந்து கொள்ள முடியும். அதேபோல, கலிலியோவுக்கு தவறாக தண்டனை கொடுத்த மதகுருமார்கள் ஏசுவின் வழியில்தான் அவரை வதைத்திருக்கிறார்கள்.

யோகா வகுப்பு இந்து வகுப்புவாதத்தின் அடையாளம் என்று அதனை எதிர்த்து வருகின்றார்கள். பூமி உருண்டை என்பதும் விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளதால் அதுவும் வகுப்புவாதம்தான்.எனவே, சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளதுபோல் கடக ரேகை, மகர ரேகை, பூமத்திய ரேகை அமைந்த உலக வரைப்படம் உள்ளது. இது வகுப்பு வாதத்தின் அடையாளம் என்று கூறி அதனை மாற்றி விட்டு பூமி சதுரமானது என்ற கிறிஸ்தவ மதச்சார்பின்மையை பாடமாக்கி விடுவீர்களா?

உங்களுக்கு அர்த்தங்கள் அர்த்தமில்லாமலும், அர்த்தமில்லாதது அர்த்தமாகவும் இருக்கின்றது. குழந்தையில்லா ஈவெராவை தந்தை பெரியார் என்கிறீர்கள். குழந்தை உள்ள கருணாநிதியை தந்தை கருணாநிதி என்று சொல்லமுடியுமா? ஏற்கனவே அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பதவிப் போட்டியில் இருக்கும் இந்த சூழ்நிலையில் அதன் விளக்கம் சொல்லவேண்டியதில்லை. தொடரும்.

இந்து சமய தமிழ் கழகம்
நிறுவனர் : பா. செந்தாமரைக் கண்ணன்(கவிஞர், எழுத்தாளர்)

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...