Monday, June 15, 2015

சிவ அபயங்க ஸ்தோத்திரம் / ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்திரம்


ஓம் அஸ்ய ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்யா

யாக்ஞாவல்க்ய ருஷி:
அனுஷ்டுப் சந்த:
ஸ்ரீ சதாசிவோ தேவதா
ஸ்ரீஸதாசிவ ப்ரீத்யர்த்தே
ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்ர ஜபே விநியோக:

சரிதம் தேவ தேவஸ்ய மஹா தேவஸ்ய பாவனம்
அபாரம் பர்மோதரம் சதுர்வர்கஸ்ய ஜாதனம்

கௌரி விநாயகோ பேதம் பஞ்சவதக்த்ரம் த்ரிநேத்ரகம்
சிவம் த்யாத்வா தசபுஜம் சிவரக்ஷாம் படேந்நர:

கங்கா தரச்சிர; பாது பாலமர்த்தேந்து சேகர
நயனே மதனத்வம்ஸீ கர்ணௌ ஸர்ப்ப விபூஷண:

க்ராணம் பாது புராராதிர்முகம் பாது ஜகத்பதி:
ஜிஹ்வதாம் வாகீச்வர: பாது கந்தாரம் சசிகந்தர:

ஸ்ரீகண்ட: பாதுமே கண்டம் ஸ்கந்தௌ விச்வதுரந்தர
புஜௌ பூபார ஸம்ஹர்த்தா க்ரௌபாது பினாகத்ருத்

ஹ்ருதயம் சங்கர: பாது ஜடாம் கிரிஜாபதி:
நாபிம் ம்ருத்யுஞ்ஜய: பாது கடிம் வ்யாக்ராஜிநாம்பர:

ஸ்க்திநீ பாது தீநார்த்த: சரணாகத வத்ஸல
ஊரூ மஹேஸ்வர: பாது ஜானு நீ ஜகதீஸ்வர

ஜங்கே பாது ஜகத்கர்த்தா குல்பௌபாது கணாதிப:
சரணௌ கருணாஸிந்து: ஸர்வாங்கனி ஸாதாசிவ:

எதாம் சிவபலோபேதாம் ரக்ஷாம் யஸ்ஸுக்ருதீ படேத்
ஸ புக்த்வா ஸகலான் காமான் சிவஸாயுஜ்யமாப்னுயாத்

க்ரஹ பூத பிசாசாத்யாஸ் த்ரைலோக்ய விசரந்தி யே
தூராதாசு பாலாயந்தே சிவநாமாபி ரக்ஷணாத்.

அபயங்கர நாமேதம் கவசம் பார்வதீபதே:
பக்த்யா பிபர்த்திய: கண்டே தஸ்ய வச்யம் ஜகத்த்ரயம்.

இமாம் நாராயணன் ஸ்வப்னே சிவரக்ஷாம் யதாசிசத்
ப்ராதருத்தாய யோகீந்த்ரோ யக்ஞவல்கீய ஸ்ததாலிகத்.

இந்த ஸ்தோத்திரம் மிகவும் அபூர்வமானது. இதற்கு சிவ அபயங்க ஸ்தோத்திரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த ஸ்தோத்திரத்தை யோகீஸ்வரர் யாக்ஞவல்க்யரின் கனவில் ஸ்ரீமந்நாராயணன் சொன்னதை காலையில் தன் சிஷ்யர்களின் மூலம் பலரும் பயனடையச் செய்தார்.

இந்த ஸ்தோத்திரத்தை சிவ ஆலயத்தில் சிவனுக்கும் அம்பாளுக்கும் எதிரில் நின்று கொண்டு பாராயணம் செய்பவர்களுக்கும் தினம் மாலையில் தங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து இதனைப் பாராயணம் செய்பவர்கள் தனக்கு வேண்டியதை அடைவார்கள். பூத, பிசாசங்கள் நெருங்காது. நவக்ரஹங்களின் பாதகநிலை விலகி எல்லா வசியமும் ஏற்பட்டு கடைசியில் சிவ சாயுஜ்யம் அடைவார்கள் என்றும் இதனைத் தகட்டில் எழுதி கழுத்தில் கட்டிக் கொள்பவனுக்கு மூன்று உலகமும் வசமாகும் என்று ப்ருஹத் ஸ்தோத்ர ரத்னாகரம் என்ற நூலில் விரிவாக கூறப்பட்டு இருக்கிறது.

எல்லா நன்மைகளைப் பெற்று சிவோஹ நிலையை அடைய ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்திரம் பாராயணம் பண்ணி சிவ அருளைப் பிரார்த்திப்போம்.

'ஓம் தத்ஸத்"

1 comment:

  1. ப்ருஹத் ஸ்தோத்ர ரத்னாகரம் இந்த புத்தகம் வேண்டும்

    ReplyDelete

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...