Friday, June 12, 2015

தொழிலில் லாபம் அதிகரிக்க

 
செவ்வாய் கிழமை அன்று தொடங்கி தொடர்ந்து செவ்வாய்கிழமைகளில் செய்து வரலாம். எவ்வளவு வாரங்கள் தொடர்கிறோமோ அவ்வளவு நன்மை வந்து சேரும்.

செவ்வாய் அன்று அதிகாலை ஆறு மணியளவில் குளித்து ஆஞ்சநேயர் படம்/விக்கிரகம் முன்பு சுந்தர காண்டம் புத்தகம் வைத்து அதற்கு சந்தனம் மஞ்சள் மற்றும் குங்குமம் இட்டு தூப தீபம் காட்டி வழிபட்டு
பின்பு

'ஓம் ஹம் அனுமதயே நமஹ்" மந்திரத்தை 108 முறை கூறி பின்பு நிவேதனம் செய்யவும்.

இந்நாளில் பால் பழம் மட்டும் உண்டு விரதம் அனுஷ்டிப்பது நன்மை சேர்க்கும். மாலையில் ஆறு மணியளவில் செம்பினால் ஆன சொம்பு ஒன்றில் சுத்தமான நீர் நிரப்பி அதில் பச்சை கற்பூரம், ஏலக்காய் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் இட்டு அதன் மேல் ஒரு தேங்காயை வைக்கவும்.சொம்பை சிகப்பு துணியினால் அலங்கரித்து அதன் மேல் பூக்கள் வைக்கவும்.

பின்பு கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 கூறி அனுமனை வழிபட்டு நிவேதனம் செய்து பூஜையை முடித்து விடலாம்.

மறு நாள் சொம்பில் உள்ள நீரை யாரும் கால் படாதவாறு ஏதேனும் மரத்தில் விட்டு விடலாம். மிகுந்த சக்தி வாய்ந்த இந்த பூஜை முறை

உடனடியாக தொழில்/வியாபாரம்/வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வை பெற்று தரும். செய்து பயன் அடையுங்கள்.

மந்திரம் : ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாயை மஹாபலாயை சுவாஹா ||

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...