Monday, August 17, 2020

முகுந்த மாலை

ஜிஹ்வே! கீர்த்தய கேஸவம் முரரிபும் சேதோ! பஜ ஸ்ரீ தரம்  
பாணிர்வந்த்வ! ஸமர்சயாச்யுதகதா: ஸ்ரோத்ரத்வய! த்வம்ஸ்ருணு  
க்ருஷ்ணம் லோகய லோசநத்வய! ஹரேர் கச்சாங்க்ரியுமாலயம்  
ஜிக்ர க்ராண!முகுந்த பாததுலஸீம் மூர்த்தந்! நமோதோக்ஷஜம்!!  
- குலசேகர ஆழ்வார்

பொருள் :

வாராய் நாக்கே! கேசவனை ஸ்தோத்திரம் செய்!  
நெஞ்சே! முராசுரனைக் கொன்ற கண்ணனைத் தியானம் செய்!  
கைகளே! திருமாலை ஆராதியுங்கள்!  
காதுகளே! தன்னையடைந்தவர்களை ஒருகாலும் நழுவ  
விடாதவனான கண்ணணுடைய கதைகளைக் கேளுங்கள்!  
கண்களே! கண்ணனைக் கண்டு அனுபவியுங்கள்!  
கால்களே! எம்பெருமான் திருக்கோயிலுக்குச் செல்லுங்கள்!  
மூக்கே! முகுந்தனுடைய திருவடிகளில் ஸமர்ப்பித்த துலஸியை நுகரு!  
தலையே! எம்பெருமானை வணங்கு !! .

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...