Monday, August 24, 2020

கண் திருஷ்டியை போக்க

ஒரு சிகப்பு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். சிகப்பு, கருப்பு போன்றவை கண் திருஷ்டியை போக்க வல்லவை என்பார்கள். அதனால் சிகப்பு அல்லது கருப்பு துணியை சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பை எடுத்து குடும்பத்தினர் மற்றும் வீட்டை சுற்றி திருஷ்டி கழியுங்கள். அதாவது மூன்று முறை வலது புறமாகவும், மூன்று முறை இடது புறமாகவும் சுற்றிக் கொள்ளுங்கள். அதை அந்தத் துணியில் போட்டு அதனுடன் சிறிதளவு கடுகு அல்லது வெண்கடுகு ஏதாவது ஒன்றை போட்டுக் கொள்ளுங்கள்.

இதனை நீளவாக்கில் சுற்றி பின்னர் இரு முனைகளையும் பிடித்து, நன்றாக முடிந்து கொள்ளுங்கள். இதனை தலைவாசலில் ஆணி அடித்து வைத்திருப்பீர்கள் அல்லவா? அதில் மாட்டி வைத்து விடுங்கள். மாதம் ஒரு முறை மட்டும் இதனை மாலை ஆறு மணி ஆவதற்குள் கலற்றி தண்ணீரில் கரைத்து யார் காலிலும் படாதவாறு வெளியே ஊற்றி விடுங்கள். இதை அமாவாசை தினத்தில் செய்தால் கூடுதல் சிறப்பான பலனை தரும். முடியாதவர்கள் மற்ற நாட்களிலும் தாராளமாக இதை செய்யலாம். மீண்டும் புதியதாக இதே போல் செய்து ஆறு மணிக்குள் கட்டிவிடுங்கள். அவ்வளவு தான். உங்கள் வீட்டை எந்த ஒரு கண் திருஷ்டியும் நெருங்கக் கூட முடியாது.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...