Wednesday, August 19, 2020

யாருக்கு குரு (ஆசான் ) அமையாது


     ஒருவருடைய ஜாதகத்தில் குரு சனிபகவான் வீட்டில் இருந்தாலும் , 
குரு+சனி சேர்க்கை இருந்தாலும் , சனிபகவான் நட்சத்திரத்தில் குரு இருந்தாலும் , ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும் , குரு ஏதாவது ஒருவகையில் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அந்த ஜாதகருக்கு முறையான குரு (ஆசான் ) அமையமாட்டார் அல்லது கிடைக்கமாட்டார் .

    இவர்களுக்கு அனுபவமே குருவாக அமையும் . இவர்கள் பல துறைகள் பற்றி தெரிந்து வைத்து இருப்பார்கள் . அல்லது அதில் அடிபட்டு சுய அனுபவம் பெற்று இருப்பார்கள்.

        இவர்களுக்கு ஏதாவது ஒரு சூழ்நிலையில் யாரிடமாவது கற்றுக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டாலும், அங்கும் குரு மற்றும் சீடன் நிலை நிலைக்காது. குரு ஜாதகரை ஒதுக்குவார் அல்லது ஜாதகர் குருவை ஒதுக்குவார் . இது ஒரு சாபக்கேடு அல்லது தோஷம் என சொல்லலாம் .

   இந்த ஜாதகர்கள் ஏகலைவன் போன்றவர்கள் . இவர்கள் குருவை மிஞ்சிய சிஷியர்கள் பட்டியலில் சேர்க்க படவேண்டியவர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு குருவாக இருந்து கற்றுத்தரும் வித்தை மேன்மை அடையும் . இவர் சொல் கேட்பர் நல்ல நிலை அடைவார். ஆனால் இவரால் முதன்மை நிலையை அடைய முடியாது.

   

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...