Wednesday, August 19, 2020

செவ்வாய்திசையின் பலன்கள்


       ஒருவருடைய ஜாதகத்தில் 
ஸ்ரீசெவ்வாய் பகவான் ஆட்சி ,
உச்சம் ,மூலத்திரிகோணம் ,நட்பு 
பெற்று திசை நடத்தினால் , ஜாதகரின் சகோதர சகோதரிஆதரவு கிடைக்கும் .வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும் .பதவி உயர்வு எதிர்பார்ப்பவருக்கு பதவி உயர்வு கிடைக்கும் . சொத்து சேர்க்கை ஏற்படும் .

           ஆனால் ஸ்ரீசெவ்வாய் பகவான் நீசம் ,பகை, மறைவு இடங்களில் இருந்து திசை நடத்தினால் பதவியில் இருப்பவர்களுக்கு பதவி இறக்கம் ஏற்படும் . செய்யாத குற்றதிற்கோ அல்லது எப்போதோ செய்த குற்றத்திற்கு இப்போது தண்டனை அனுபவிக்க வேண்டியது வரும். விபத்து ஏற்பட்டோ அல்லது கீழே விழுந்தோ அடிபட்டு காயம் ஏற்படும் .

         சகோதர-சகோதரிகள் இடையே பகை ஏற்படும் . பக்கத்து வீட்டாரிடம்  சண்டை சச்சரவு ஏற்படும் . போலீஸ் வழக்கு, கோர்ட் கேஸ்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும் . எதிரிகள் தொல்லை இருக்கும் .

               

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...