Saturday, November 10, 2012

அஞ்சறை பெட்டி சித்த வைத்தியம்

தினம் கண்டும், கொள்ளாமல் இருக்கும் மருந்து பெட்டகமே நம் வீட்டில் உள்ள அஞ்சரை பெட்டி. துரித உணவு பெருகும் காலத்தில் இதை நாம் மறுபடியும் நினைவு கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சில பெயர் காரணம் அறிந்தால் உண்மை அறியலாம்.


சீரகம் (சீர் + அகம்) = நாம் உடல் வெப்பத்தை சீராக வைத்து கொள்ள உதவுவதால் தான் இந்த பெயர். சீர் என்றால் ( steady) அகம் என்றால் உள்ளே (inside). தென் மாவட்டங்களிலும், கேரளத்திலும் தண்ணீரை சீரகம் போட்டு காய்த்து தினம் அருந்துகின்றனர்

Cumin seeds tamil name is about keeping your internal system steady


பெருங்காயம் (பெரும் + காயம்) = பெரும் என்றால் பெரிய அல்லது நீண்ட என்ற பொருள் உண்டு. காயம் என்றால் உடம்பு என்று பொருள் உண்டு. ஆகையால் பெருங்காயம் என்றால் நீண்ட ஆயுள் என்ற பொருள் .

முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது நாம் இப்போது உண்ணுவது கூட்டு பெருங்காயம் தான். பெருங்காயம் சுத்தமாக வாங்க வேண்டும் என்றால் பால் காயம் வாங்க வேண்டும். விலை அதிகம். அனால் ஓர் இம்மி அளவு பிட்டு உணவில் போட்டால் அடுக்களை பிரமாதமாக மணக்கும். வாசம் வெகு நேரம் இருக்கும்

Asafoetida in tamil name is long life



வெந்தயம் (வெந்த + அயம்) = வெந்த என்றால் சூடாகி பதப்படுத்த பட்ட என்பதாகும் + அயம் என்றால் இரும்பு என்று பொருள் . இரும்பை கொண்டு செய்யும் செந்தூரத்திற்கு "அயச்செந்தூரம்" என்று பெயர். ஆகையால் பதப்படுத்தப்பட்ட இரும்பு என்பதே இதன் பொருள். தலைக்கு எண்ணெய் தயாரிக்கும் போது வெந்தயம் போடுவர், மயிர் கால்கள் வலு பெறவே. இது அதனுள் உள்ள இரும்பு சத்தால் தான்.

Fenugreek means burnt iron per tamil name

மிளகு (Pepper)

பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம். பல மருத்துவ குணங்கள் நிறைந்த பொருள் இது . பண்டைய காலத்தில் பச்சை மிளகாயை பயன் படுத்த வில்லை என்று தெரிகிறது. கடுகையும், பச்சை மிளகாயையும் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் தவிர்க்கவே கூறி உள்ளனர்.

சுக்கு

"சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை "



வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல், தேடேன் பெருங்காயம்!
ஏரகத்துச் செட்டியாரே!

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...