Friday, September 19, 2014

ஆவிகள் அமானுஷ்ய சக்திகள் அனைவரின் கண்களுக்கும் தெரியுமா?


ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பரணி, ரோஹிணி, திருவாதிரை, பூரம், உத்திரம். பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி இந்த ஒன்பது நட்சத்திரங்களும், மனுஷ கண நட்சத்திரங்கள் ஆகும்.

அசுவினி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி, இந்த ஒன்பது நட்சத்திரங்களும். தேவ கண நட்சத்திரங்களாகும்.

கிருத்திகை, ஆயில்பம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், இந்த ஒன்பது நட்சத்திரங்களும், ராட்சஷ கண நட்சத்திரங்களாகும்.

இதில் மனுஷ கணம் என்ற மானுட வர்க்கத்தோடு தொடர்புடைய நட்சத்திரத்தை உடையவர்களின் கண்களுக்கு ஆவிகள் கண்களுக்கு புலப்படாது. இவர்களை ஆவிகள் தன் கெட்ட சக்தியின் மூலம் பயமுறுத்துவது, பயமுறுத்தும் சில சேட்டைகளை செய்வது போன்ற செயல்களை, இந்த மனுஷ கணத்தில் பிறந்த நட்சத்திரக்காரர்களிடம் காட்டும்.

An ancient unique Hindu temple Jawa Timur(Indonesia)

 
An ancient unique Hindu temple with 3-teer Pyramidal base Candi Jabung, Paiton, Probolinggo, Jawa Timur(Indonesia)

Brihadeeswarar Temple created in the 11th century AD built by Raja Raja Chola I



'Main shrine of Brihadeeshwarar Temple reaching to a height of 66mMore than 55million tons of granite was transported to Tanjaur from Tiruchirapalli located 60miles apart. They transported more granite than was used to built great pyramid of Giza. The temple complex is so vast that more than 200TajMahal can be put together within the temple precincts.
The Kalash at the top of the shrine carved out of single granite stone and is weighing more than 81tons.
A first rectangular surrounding wall, 270 m by 140 m, marks the outer boundary. The main temple is in the center of the spacious quadrangle composed of a sanctuary, a Nandi, a pillared hall and an assembly hall ( mandapas), and many sub-shrines. The most important part of the temple is the inner mandapa which is surrounded by massive walls that are divided into levels by sharply cut sculptures and pilasters providing deep bays and recesses

Ancient temple at Malot, Pakistan Dated: BC. 980


The only remains of any antiquity at Mallot are a temple and gateway in the Kashmirian style of architecture. They are built of a coarse sandstone of various shades of ochreous red and yellow, and many parts have suffered severely from the action of the weather, the surface having altogether crumbled away...The temple is a square of 18 feet inside, with a vestibule or entrance porch on the east towards the gateway. The gateway is...a massive building...divided into two rooms...On each side of these rooms to the north and south there are highly decorated niches for the reception of statues, similar to those in the portico of the temple. These niches are covered by trefoil arches which spring from flat pilasters. Each capital supports a statue of a lion under a half trefoil canopy...The roof is entirely gone

Giant Statue of Lord Vishnu

 
Giant Statue of Lord Vishnu in a reclining posture sculpted from a single block of granite inside the second floor of Undavalli caves

Neelkantheshwar Temple, Udaypur(MP)



Built in the 11th cent from red sandstone by the Parmara King Udayaditya. The temple seems blessed to the common eye because of its alignment. It is so aligned that the first rays of the sun shine on the Shiva lingam in the sanctum.

Mantap designed like chariot, Airavateshwar Temple

 


A inscription at temple tells about the renovation of the shrines by Kulottunga Chola III in 12th century suggesting that shrine is olde

MONOLITHIC Masroor Temple

 
Amazing MONOLITHIC Masroor Temple complex ornately carved out of single rock
According to locals, this temple was built by Bhima during Mahabharata times more than 5000 years ago!
विशालकाय शैलोत्कीर्ण एकाश्म मसरूर मँदिर
Amazing Masroor Temple complex ornately carved out of single rock
According to locals, this temple was built by Bhima during Mahabharata times more than 5000 years ago.
The 15 temples form a single group with a larger temple - Thakurdwara shrine - in the centre. 14 temples are cut only from the outside, but Thakurdwara - also from the inside.
All temples are (or were) covered with intricate stone carvings of high quality but the most elaborate carvings adorn Thakurdwara.
The entrance in this central temple is facing east. Entrance part has four massive columns. Further entrance in the main shrine - garb-griha - leads through especially ornate stone door. Inside the shrine are blackstone images of Lord Rama, Sitaand Laxmana.
In the front of this group of pyramids was hewn almost 50 m long, rectangular water tank - gan . This is important part of this architectonic complex, almost always filled with water and mirroring the amazing temple complex

Dwaraka


Seven miles off shore,while scanning the sea floor with ( again! ) side scan sonar, at adepth of 170 feet, they started picking up images that were both regular and repetitive - straight lines forming grids . It was something significant, because itcovered five square miles of the floor.
The Indian government immediately dispatched exploratory and survey teams to investigate. Underwater work at the site is very difficult and dangerous because there are very powerful cross currents in that region.
Even so, they were able to locate many of the features that had produced the grid shaped images on their sonar screens. Long stone walls are clearly visible on the sea floor, obviously made of cut, shaped and stacked stones.
Two distinct cities were located, both situated on the banks of a former riverbed. The cities were both large and well-formed. The grid maps of their streets are reminiscent of Mohenjo-Daro, Harrapa and the other cities of the Indus Valley culture.
Even more exciting, they have been able to bring up dozens of artifacts and evidences of human habitation. Objects of stone, pottery, metal and wood have been retrieved. There have even been fragments of bone found.

Sas-Bahu Temple at Gwalior

 
Sas-Bahu Temple at Gwalior fort (India) built during reign of great Mihir Bhoja IDated- 9th century CE

The temple is excellent example of ancient structural engineering of high precision. Massive decorated columns and beams were culled one over other without any bonding material. And you will barely notice the joining line. A unique architectural feature of these pyramidal shaped temples built in red sandstone is that they have been raised several stories high solely with the help of beams and pillars, and with no arches having been used for the purpose. The main temple looks dauntingly sturdy. The stylistic smaller Sahastrabahu temple is a replica of the larger temple.

About the patron king Mihir Bhoja I

The Persian traveler Ahmad ibn Rustah praised the Gujara- Pratihar a ruler Mihir Bhoja I in his Kitāb al-A'lāk an-Nafīsa thus:
“In Hind there is a Malik (ruler) who is called Al-juzar (Gujar). Such is awdl (justice) in his empire, if the gold is dropped in the way, there is no danger of its being picked up and stolen away by any body. His empire is very vast. Arab traders go to him, he makes ahsan (favour) to them, purchases merchandise from them; the purchase and sale are carried in gold coin called tatri. When the Arabs request him to provide a body guard, he says, there is no thief in my empire. If there is any incident or loss to your goods, merchandise and money I stand surety. Come to me, I will pay the compensation.

தீராத நோய்களை தீர்க்கும்...ஸ்ரீ தன்வந்திரி பகவான் மஹா மந்திரம்







மருத்துவக் கடவுளும், ஆரோக்கியம் அருளும் அமிர்த கலசத்தைத் தமது கரங்களில் தாங்கியிருக்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் மந்திரம்

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாஸனாய த்ரைலோக்ய
நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ’.

இதனை ஜபம் செய்ய துளசி மணி மாலையைப் பயன்படுத்த வேண்டும்
தினமும் 48 முறைகள், பசும்பாலும், துளசி தீர்த்தமும் நைவேத்தியமாக வைத்து, உச்சாடனம் செய்து அவற்றை அருந்தி வரவேண்டும். இந்த முறையால் இழந்த ஆரோக்கியம் மீண்டும் திரும்பும். இதை நமது பிரச்சினைக்குத் தக்கவாறு பயன்படுத்திப் பலனடையலாம்

(அல்லது)

ஒரு வெள்ளி டம்ளரில் சுத்த ஜலம் சிறிது எடுத்துக் கொண்டு, வடக்கு அல்லது கிழக்கு முகமாக ஒரு ஆசனத்தில் அமர வேண்டும். சிறு தர்ப்பைக் குச்சியை வலது கை கட்டை விரலாலும் நடு விரலாலும் எடுத்து அதை அந்த ஜலத்தில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த நிலையிலேயே தினமும் 24 அல்லது 48 முறை மந்திர உச்சாடணம் செய்வதன் மூலமாக அந்த ஜலம் மந்திர சக்தியைப் பெறுகிறது. பிறகு அந்த நீரை அருந்தினால், நமது உடலின் எதிர்ப்புத் திறன் படிப்படியாக உயர்ந்து நிச்சயமாக ஆரோக்கியம் மேம்படும். தீராத நோய்களை தீர்க்கும்.இம்முறையை நாம் மற்றவர்களுக்காகவும் செய்து நல்ல விளைவுகளைப் பெற்று மகிழலாம்.

திருப்பம் தரும் திருமால் மந்திரம்




நல்ல திருப்பங்களை தந்தருளும் திருப்பதி திருமலை திருவேங்கடவனின் அரிய மந்திரமாகும்.

இதை ஒரு வளர்பிறை திங்கட்கிழமையன்றோ, அல்லது ஒரு திருவோண நட்சத்திரத்தன்றோ அல்லது வளர்பிறை ஏகாதசியன்றோ அதிகாலையில் ஆரம்பித்து செய்ய வேண்டும்.

முடிந்தவர்கள் நிச்சயம் ஒரு குரு முகமாக உபதேசம் பெற்று செய்வது உத்தமம்.
முதலில் பிள்ளையாரையும், குல தேவதையையும் மனதார வணங்கி விட்டு இந்த மந்திரத்தை துளசி மணி மாலை கொண்டு தினமும் காலையில் 108 முறை ஜபம் செய்து வர வேண்டும்.

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நமஹ

திருமலை பெருமாள் திருவருளை பெறம் பலவித வழிகளில் இந்த மந்திரமும் ஒன்று. காலை, மாலை இரு வேளைகளில் 108 முறை ஜபம் செய்வதோடு ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் முதல் திங்கட்கிழமைகளில் மலையேறி சென்று அவனது தரிசனத்தையும் பெற்று வந்தால் சர்வ நிச்சயமாக ஒருவரது பொருளாதார நிலையில் திருப்திகரமான நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

தம்பதியர் ஒற்றுமைக்கு மந்திரம்






ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று மாலை 6 மணியில் இருந்து 8 மணிக்குள் இதைச் செய்ய வேண்டும்.

ஒரு பித்தளைத் தாம்பாளத்தின் நடுவில் சிறிது பச்சரிசி மாவும், கற்கண்டுப் பொடியும் கலந்து வைத்து, அதைச் சுற்றிப் பதினொரு வெற்றிலைகளைத் தாமரை போலப் பரப்பி வைக்க வேண்டும்.

வெற்றிலைகள் ஒவ்வொன்றிற்கும் மஞ்சள், குங்குமம் கொண்டு பொட்டிட வேண்டும்.
தட்டின் இடப்புறமாக சர்க்கரை போடாத காய்ச்சிய பசும்பாலை ஒரு டம்ளரில் வைக்க வேண்டும்.
தட்டின் வலப்புறமாக மஞ்சள் நிறத் துணி கொண்டு திரி போட்ட நெய் தீபமேற்றி வைக்க வேண்டும்.
பச்சரிசியில் மஞ்சள் கலந்து அட்சதை தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர்,

‘ஓம் நமோ யதி வதீம்ஸ
வஸீகா வாக் விலாஸினி
காமேஸி மாங்கல்ய தாரிணி
தேவி ஸகல ஸெளபாக்ய
யோகினி ஸ்வயம்
ஸித்தம் விஜயீ பவ’


இந்த மந்திர ஸ்துதியை 9 முறை உச்சாடனம் செய்ய வேண்டும். அப்போது நெய் தீபத்திற்கு அட்சதையைக் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். மந்திர அர்ச்சனையை நிறைவு செய்தபின்பு கற்கண்டுப் பொடி கலந்த பச்சரிசி மாவை, நைவேத்தியப் பசும்பாலுடன் சிறிது கலந்து கணவன்– மனைவி இருவருமே பிரசாதமாக அருந்தினால், குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும். தம்பதியர் இருவருக்குள்ளும் அன்யோன்யம் வலுப்பெறும்.

திருமண தடை விலக காதலில் வெற்றி பெற சுக்ர மந்திரம்




சுபம் கரோதி கல்யாணம்
ஆரோக்யம் தன சம்பதா
சத்ரு-புத்தி-விநாசாய தீப
ஜ்யோதிர்-நமோஸ்துதே தீப
ஜ்யோதி பரப்ரஹ்மா-தீப
ஜ்யோதி ஜனார்த்தன தீபோ
ஹரதுமே பாபம்-தீப
ஜ்யோதிர்நமோஸ்துதே'

பஞ்சமுக விளக்கை ஏற்றிவிட்டு மேற் கண்ட ஸ்லோகத்தை 12 முறை கூறி பஞ்ச முக தீப ஜோதியை நமஸ்காரம் செய்ய வேண்டும். மகாலட்சுமியையும் வழிபட வேண்டும்.

பின்பு இன்னொரு அகல் விளக்கில் பசு நெய் விட்டு, அதில் சிறிது மொச்சைப் பருப்பைப் போட்டு பஞ்சு திரியால் தீபமேற்றி கீழ்க்கண்ட சுக்ரனுக்குரிய மந்திரஸ்துதியை 48 அல்லது 108 முறை சொல்லவும்.

சுக்ரன்: மந்திரம்:

ஓம் ஐம் கம் க்ரஹேச்வராய சுக்ராய நம.

நலம் தரும் ராம மந்திரம்



ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமேராமே மனோரமே
சகஸ்ரநாம தத்துல்யம்
ராமநாம வரானனே

கலியுகத்தில் பாவம் நீக்கும் மந்திரமாக திகழ்வது இந்த ராமநாம மந்திரமாகும்.
இதனை ஒருமுறை சொன்னால் நூறுதடவை ராமநாமம் சொல்வதற்கு சமம். அனைவரும் சொல்லி பயனடையலாம்.

சக்தி கணபதி மந்திரம்


எக்காரியத்திலும் வெற்றியையும் சக்தியையும் தரும்


ஆலிங்கிய தேவீம் ஹரிதம் நிஷ்னாம்
பரஸ்பரா ஷ்லிஷ்டக தீ நிவேஷம்
சந்த்யா ருணம் பாஷஷ்ருணிம் வஹஸ்தம்
பயபஹம் சக்தி கணேச மீதே.

சக்தி கணபதி மந்திரத்தை 51 முறை சொல்ல அளப்பறிய செல்வமும், மனதில் நிம்மதியும், மனமகிழ்ச்சியும், மனதில் துணிவும், எக்காரியத்திலும் வெற்றியையும் தரும்

பேய்கள் பற்றிய உண்மைகள்



1.பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும். எனவே தான் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.

2.பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது. எப்பவுமே கோவில்கள், ஆலயங்கள் என வழிபாட்டுத் தலங்களை அண்டியே சுற்றிய படி இருக்கும். சிலநேரம் பாழடைந்த கட்டடங்களை அண்டியும் இருக்கும்.

3.பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல. விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.

4.பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றும்.

5.பேய்கள் உறங்குவதில்லை. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும் வரை அலைந்தபடியே இருக்கும்.

6.பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும். சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்யும்.

7.பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும். உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.

8. பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings) உண்டு. ஆனால் உணர (sense) முடியாது.

9.பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும்.

10.பேய்கள் அல்லது ஆவிகளால் கொலை செய்ய முடியாது. ஆனால் ஒருவன் தன்னைத்தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விடும் சக்தி உண்டு.

11. பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல. எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.

12.பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.

13.பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.

14.பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.

15. பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) ‘O’ (+) அல்லது O’ (–) ஆக இருக்கும். மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்.

16.குழந்தைகளாக இறந்து போயிருந்தால் பேய்கள் அல்லது ஆவிகள் தேவதைகள் என அழைக்கப்படுவார்கள்.

17.பேய்களால் சும்ம இருக்க முடியாது. எப்பொழுதும் தங்கள் மேல் கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களை தொந்தரவு செய்த படியே இருக்குமாம்.

18.பேய்கள் எப்போதுமே தாங்கள் இறந்துவிட்டதாக நினைப்பது இல்லை. எதாவது ஒன்றை செய்து தான் இறக்கவில்லை என்பதை நிரூபிக்க முயற்சிக்கும்.

19.பேய்கள் பல்வேறு விதங்களில் மனிதர்களுடன் தொடர்புகொள்ளுகின்றன.. கனவுகள், மர்ம குறியீடுகள், தானாக எழுதுவது, சத்தம், புகை, போன்ற பல்வேறுவகையான தந்திரங்களை பயன்படுத்துகின்றன.

20.பேய்களுக்கு வாசனை மோப்பசக்தி அதிகம். சில வாசனைகளை அவைகள் நுகர்ந்த்து அது பிடித்துவிட்டால் அங்கே தன்னை இருக்க வைக்க முயற்சிக்கும். சில வகை பெர்ஃபியூம் வாசனைகளும் ரொம்ப பிடிக்கும்.

21. பேய்களுக்கு நேரம் காலம் தெரியாது என்றாலும், நள்ளிரவு நேரங்களில் பகலை விட கூடுதலாக அலையும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சத்தங்கள் இருந்தால் பேய்கள் வராது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால், பேய்களால் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் வேகத்தையும், அதன் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சக்தி நிச்சயமாக உண்டு.

22.அமைதியான இடம், நிசப்த்தமான இடங்கள், நேரங்களில் திடீரென சத்தத்தை உண்டாக்கி திகிலூட்டுவது பேய்களுக்கு பிடித்த விசயம்.

23.பேய்கள் ஒளிக்கீற்று, அமானுஷ்யக் கோடுகள், மூடுபனி, புகார், கருநிழல், நிழலுக்குள் நிழல், மங்கலான தெரிவது, கரு உருவம், காற்றுத் தூசிகள், காற்று சலங்கை சத்தம், பெண்குரல் சிரிப்பு போன்றவைகள் மூலம் தங்களை வெளிப்படுத்துகின்றன. முழு உருவத்தையும் எப்பொழுதும் வெளிப்படுத்துவது இல்லை. ஆனால் சாத்தியம் உண்டு.

24.கூட்டமாக வருபவர்களுக்கு பேய்கள் தன்னை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அதில் ஒரு ஆளை தேர்ந்தெடுத்து அவரை மட்டுமே பின்தொடர்ந்து செல்லும்.

25.பேய்கள் குழந்தைகள், அல்லது பெண்கள், ஆண்கள் உடலுக்குள் நுழைய முடியும். பேய்களுக்கு நிறை அதிகம் என்பதால் அவைகளுக்கு நிறைய சக்தி தேவை என்பதால் பீடிக்கப்பட்டவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். நிறைய சக்தியை உறிஞசி விடுவதால் பீடிக்கப்பட்டவர்கள் நாளடைவில் மெலிந்து போவார்கள்.

26.பேய்களுக்கு ஞபாக சக்தி அதிகம். வாழும் காலத்தில் நடந்த உணர்வுப் பூர்வமான விடயங்களை , சம்பவங்களை அடிக்கடி நினைத்து பார்க்குமாம். ஆனால், சாவுக்கு காரணமான சம்பவம் தான் அதிகம் நினைவில் நிற்கும். பழிவாங்கும் எண்ணம் ஏற்பட அதுவே காரணமாகும்.

27.குழந்தைகள், மிருகங்களால் பேய்களை அடையாளம் காணமுடியும். மிருகங்களின் மீதும் பேய்கள் இறங்கி அவைகளை தாறுமாறாக செயல்பட வைக்க முடியும்.

28. பேய்களுக்கு உதவிசெய்யும் குணம் உண்டு. பல சந்தர்ப்பங்களில், குழந்தைகள் முதல் பெரியவர்களை காப்பாற்றி இருப்பதை நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள். பேய் ப்பிடித்தவருக்கே பல சமயங்களில் உதவி செய்த சம்பவங்களும் உண்டு. அவர் குடும்பத்தினரை கூட ஆபத்துகளில் காப்பாற்றியிருக்கிறது. புதையல்கள், கொலைகளில் துப்புகளை கூட காட்டிக்கொடுத்தும் இருக்கின்றனவாம்.

29. இருப்பிடத்தை விட்டு வெளியே வராத பேய்களும் உண்டு. ஆனால், அந்த வழியாக யார் வந்தாலும் அவர்களை மட்டும் பயமுறுத்தி வேடிக்கை காட்டும் பழக்கம் பேய்களுக்கு உண்டு

30.பேய்கள் இடம்பெயரும்பொழுது பயங்கர காற்று, காற்றுச்சுழல், நீர்நிலைகள் அதிருதல், சுழிகள் உண்டாகுதல், மரங்களை முறித்தல், கதவுகள் தானாக அடிபடுதல் போன்றவை ஏற்படுகின்றன.

திருப்பதி மலையில் ஏறும் போது சொல்ல வேண்டிய மந்திரம்



ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே ச்ரத்தயாஸஹ
தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம்
நகோத்தம க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா
பாபசேதஸ த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம்
மாதவம் தர்சயஸ்வமே

பொருள் :

பிரம்மா முதலிய தேவர்களும் கூட எந்த வெங்கடமலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கம் நிறைந்ததும், அளவு கடந்த புண்யமுள்ளதும், எல்லா தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான ஹே மலையே! தங்களை கால் வைத்து ஏறுகிறேன். ஓ சிறந்த பர்வதமே! அதனால் ஏற்படும் எனது பாபத்தைக் கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். தங்களுடைய சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீ வெங்கடேசனை தாங்கள் எனக்கு தரிசனம் செய்து வைத்து அருள வேண்டும்.

திருப்பதி அரிய புகைப்படம்

தடைகள் விலக கணபதி மந்திரம்



மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத
ந ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;

இதை ஸ்லோகத்தை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்.

காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய மந்திரம்






கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷபதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

சகலசௌபாக்கியமும் தரும் சௌபாக்கிய லட்சுமி மந்திரம்



ஸெளமங்கல்யாம்பீப்ஸிதா:
பதிமதீ: ஸெளந்தர்ய ரத்னாகரா:
பர்த்தாஸங்கமுபேயுஷீ:
ஸுவஸனீ: ஸீமந்தனீஸ்
ஸுப்ரியா: ப்ரேம்ணா புத்ரகிருஹாதி
பாக்யவிபவை: ஸம்யோஜ்ய
ஸம்ரக்ஷதீம் ஸ்ரீ விஷ்ணுப்ரியகாமினீம்
சுபகரீம் ஸெளபாக்ய லக்ஷமீம் பஜே

சௌமாங்கல்யத்தை விரும்பும் சுமங்கலிகள் சௌபாக்கிய லட்சுமிக்கு பிரியமானவர்கள். அவர்களை ப்ரேமையுடன் குழந்தைகளையும், வீடு, தோட்டம், வாகனம், ஐஸ்வரியம், ஆரோக்கியம், மாங்கல்யம் முதலாக கொடுத்து ரட்சிக்கும் ஸ்ரீ விஷ்ணுவிடம் அதிகமாக ஆசை வைத்திருக்கும் லட்சுமிதான் சௌபாக்கிய லட்சுமி அம்மாளை ஜெபிக்கிறேன்.

சௌபாக்கிய லட்சுமி மந்திரத்தை 11முறை சொல்ல சகலசௌபாக்கியமும்,உண்டாகும்

நினைத்த காரியங்கள் நிறைவேற மந்திரம்




ஜயா சவிஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதா
குப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீ
வீணா புஸ்தக தாரிணீ

இச்சுலோகத்தை தினமும் பத்து முறை கூறி வழிபட்டு விட்டு எக்காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி பெறலாம். சம்சார சாகரத்திலிருந்து விடுபட ஞான யோகி ஆதிசங்கரர் சிவநாமா வல்யஷ்டகம் எனும் சுலோகங்களை அருளியுள்ளார்.

இச்சுலோகங்கள் ஒவ்வொன்றிலும் மாந்திரீக வலிமையுள்ள சொற்கள் அடங்கியுள்ளன. இச்சுலோகங்களை வீட்டில் சிவபூஜை செய்தோ, சிவபெருமான் சன்னதியிலோ பாராயணம் செய்யலாம். தினந்தோறும் மூன்று முறை வீதம் 108 நாட்கள் இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் குடும்பப் பிரச்சனைகள் நீங்கும்.

சம்சார சாகரத்திலிருந்து நிம்மதியான வாழ்வு பெறும் மந்திர வலிமை இச்சுலோகங்களுக்கு உண்டு என ஆதிசங்கரர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

கேட்ட வரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம்



ஓம் நமோ பகவதே
சுப்ரமணியாய ஷண்முகாய மகாத்மனே
ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய
வீராய சூராய மக்தாய மஹா பலாய
பக்தாய பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய
மம ஸர்வா பீஷ்டம்
ப்ரயச்ச ஸ்வாஹா!
ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!

இதை அனுதினமும் முருகன் திருவுருமுன் 15 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரகிக்கப்படும் மந்திரமாகும். இதை யந்திரத்தில் ஸ்தாபனம் செய்து 48 நாட்கள் பூஜித்தால் முருகன் காட்சி கிட்டும் என `மாலா மந்திரம்' என்னும் பழங்காலத்து நூல் தெரிவிக்கிறது.

வாஸ்து பகவான் மந்திரம்

 
துன்பங்கள், தடைகள் நீக்கும் வாஸ்து பகவான் மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் மோகன
ஸ்தம்பன உச்சாப ப்ரமுக துஷ்ட
வித்யோ பத்ரவ நீவாரகாய
ஸ்ரீவாஸ்து நாதாய அர்ஜ்ய
பூஜாம் நிர்பவாமிதி ஓம் நமக:

மந்திரம் தந்திரம், உச்சாடனம், ஏவல் பில்லி சூன்யம், காற்று கருப்பு ஆகிய தீமை தரும் வழிகளில் யாராவது இடையூறுகள் துன்பங்கள், வாழ்க்கைத் தடைகள் செய்ய முற்பட்டால் அவை வாஸ்து பகவானை பூஜிப்பதால் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் விடும்.

12 மாதங்களில் பிறந்தவர்களுக்கு12 மாத தெய்வங்களின் அதிஷ்ட மந்திரங்கள்




சித்திரை- மது:

சங்க சக்ரோ ஜ்வலகரம் கிரீட்டத்பாசி
மஸ்தகம் ஜகானந்த ஜனனம்
மதுபாஸ முபாஸ்மஹே

வைகாசி- மாதவர்:

கௌமோதகீ சார்ங்க தரம் மாசம் மாதவ
சம்ஜகம் கருத்மத் வாகன
கதம் வந்தே பீஷ்டஸ்ய சக்தயே

ஆனி- சுக்ரர்:

த்ரிசீர்ஷம் ஷட்புஜம் பிரம்ம சூத்ரோஜ்வல
புஜாந்தரம் வ்யாக்ர வாகன
மாரூடம் சுக்ர மாஷ முபாஸ் மஹே

ஆடி- சுசி:

த்வி சீர்ஷகம் சதுர்ஹஸ்தம்
பன்னகேச்வர வாகனம் உபாஸ் மஹே சுசிம்
மாஸம் பக்தா பீஷ்ட ப்ரதாயகம்

ஆவணி - நபோ:

சதுர்முகம் சாஷ்ட புஜம் வராக வர
வாகனம் நபோ மாஸம் கமாம்யத்ய
க்லேசா நாப மனுத்தயே

புரட்டாசி- நபஸ்யர்:

பஞ்ச வக்ரம் தகபுஜம் சாரங்க பிரவாஸ்திதம்
நமாம்யஹம் நபல்யாஜ்யம்
மாஸம் இஷ்டார்த்த சித்தயே!

ஐப்பசி- கிஷர்:

ஷண்முகம் துவாதச புஜம் பல்லூஜவர
சம்ஸ்திதம் பக்தா பீஷ்ட ப்ரதம் நித்யம்
இஷம் மாஸ முபாஸ்மஹே

கார்த்திகை - ஊர்ஜர்:

த்ரிநேத்ரம் சைவஜஷனம் சாருசந்த்ரார்த்த
சோபிதம் கைலாஸ சிகரா வாஸம்
ஊர்ஜம் மாஸ முபாஸ்மஹே

மார்கழி - ஸஹர்: வ்ருஷா ரூடம் சூயபாணிம் ப்ரமதா வலிசேவீதம் நமாமி சிரஸா நித்யம் சகாக்யம் மாஸ மன்வஹம்

தை- ஸஹஸ்யர்:

ஸாரிகா வாகனாரூடம் கட்க கேடக
சத்ரகம் நமாமி சிரசா நித்யம்
ஸகாக்யம் மாச மன்வஹம்

மாசி - தபோ:

சந்த்ர ஹாஸோ ஜ்வலகரம் சுகப்ரவர
வாகனம் த்யாயா மிஷ்டஸ்ய
ஸ்ம்லிஜ்யை தபோ மாஸ மண்யதீ

பங்குனி - தபஸ்யர்:

தபஸ்யம் மாஸ மீடேகம் கோகில
ப்ரவரஸ்திகம் ப்ரம்ம சூத்ரோ
ஜ்வலாம்ஸம்ஸ கிரீடாஞ்சீத மஸ்தகம்.

இப்பிறவியில் `நான்ராசியே இல்லாத துரதிஷ்டசாலி
என்று வருந்துபவர்கள் மிகவும் சக்திவாய்ந்த பிரயோக
ராசி மந்திர ரகசியக் கூறுகளைப் பயன்படுத்தி வெற்றி காணலாம்.

தனவசியம் உண்டாக குபேர மந்திரம்



ஓம் யஷாய குபேராய வைஸ்ரவணாய
தனதான்யாதிபதயே தனதான்ய
ஸம்வ்ருத்திம்மே தேகி தேகி தாபய ஸ்வாஹா''

இம்மந்திரத்தை 32 வீதம் தினம் ஜெபித்து வர பணக்கஷ்டமே வராது.

வேலை கிடைக்க மந்திரம்



கற்ற கல்விக்கு வேலை கிடைக்காத அவல நிலை இன்று உள்ளது. எல்லோரும் எல்லாமும் அடைய வேண்டி இந்த உலகில் எத்தனை வாசல்கள் திறந்தாலும் போதவில்லை. இதற்கு

யாதேவி சர்வ பூதேஷு அபர்ணி
ரூபேண சமஸ்திதா நமஸ்தஸ்யை நமோ நமக'

இம்மந்திரத்தை 54 தடவை கூறி நெய், நல்லஎண்ணை, தேங்காய் எண்ணை சேர்த்து தீபம் இட்டு 41 நாட்கள் கூறிட வேலை கிடைக்கும்.

அதர்வண வேத சரப மந்திரன்

 
ஆபத்து நஷ்டம் நோயை விரட்டும் மந்திரம்


அதர்வண வேத சரப மந்திரன் எல்லா பாபங்களையும் போக்கி நம்மை காக்க வல்லது

ஹூம்காரீ சரபேஸ்வர: அஷ்ட சரண:
பக்ஷீ சதுர் பாஹுக:
பாதா கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர:
காலாக்னி கோடித்யுதி:
விச்வ க்ஷோப நிருஸிம்ஹ தர்ப்ப சமன:
பிரும்மேந்திர முக்யைஸ்துத:
கங்கா சந்தரதர: புரஸ்த சாப:
ஸத் யோரிபுக் னோஸ்து

(சரபேஸ்வரருக்கு எட்டு கால்களும், 4 கைகளும், இரு இறக்கைகளும், கருடனைப் போன்ற மூக்கும், கால்களால் நரசிம்மத்தை சாந்தப்படுத்தி வைத்தும், காலாக்னி போன்ற காந்தியும், கங்கை, சந்திரன், மான், மழு, ஏந்தி உலகத்தின் கஷ்டத்தைப் போக்க மனம் கொண்ட சரபேஸ்வரர் என்முன் தோன்றி என்னைக் காத்து அருள வேண்டும்.)

இந்த மந்திரதை செய்து தினம் காலை மாலை பாராயணம் செய்கிறவர்கள் பேராபத்திலிருந்தும், பெரும் நஷ்டத்திலிருந்தும், கொடும் நோயினின்றும் விடுபட்டு சகல மங்களங்களையும் பெறுவார்கள்.

சொந்த வீடு, பூமி லாபம் தன லாபம் பெற



இந்த மந்திரதை செவ்வாய்க்கிழமை தோறும் 25 முறை ஜெபித்து பால் பாயாசம் நிவேதனம் செய்து அம்பிகையை வழிபட தனலாபத்துடன் பூமி லாபமும் கிடைக்கும்.

பதந்யாச க்ரீடா பரிசய மிவாரப்து மனஸ:
ஸ்கலந்தல்தே கேலம் பவனகல ஹம்ஸா நஜஹதி
அதஸ்தேஷாம் சிக்ஷம் சுபகமணி மஞ்ஜீர ரணித்
சலாதாச க்ஷணம் சரணகமலம் சாருசறிதே:

ஒரு ஆலயத்தில் கும்பாபிஷேகமோ, கட்டிய வீட்டில் குடிபோக முடியாமலோ தடைபட்டால் வடக்கு திசை நோக்கிச் செல்லும் நதிகள் அருகே அமைந்துள்ள ஆலயங்களுக்குச் சென்று
ஆக்ஞை கணபதி, வாஸ்து ஓமம் நடத்தி, நதிகள் நீரை கொண்டு வந்து தெளித்தால் உடன் பலன் கிட்டும்.

திருவலஞ்சுழி-காவேரி, திருமாந்துறை-காயத்ரி நதி, திருமழபாடி-கொள்ளிடம் காளஹஸ்தி-பொன்னாறு, வாரணாசி-கங்கை.

கடன் தீர விநாயகர் மந்திரம்



ஓம் கம் கணபதியே வக்ரதுண்டாய நம
ருணம் விமோசய விமோசய''

என்று 108 தடவை கூற வேண்டும். இவ்வாறு தினமும் சொல்லி வந்தால் கடன் பிரச்சனை படிப்படியாக தீரும்

குபேரனின் சிந்தாமணி மந்திரம்

 


மந்திரம்நம் வழிபடும் தெய்வங்களுக்கு மூலமந்திரங்கள் உள்பட பல வகைப்பட்ட மந்திரங்கள் உள்ளன.

அவை ஒருவரி மூலம், மூலமந்திரம், காயத்ரி மந்திரம், மாலா மந்திரம், அஷ்டகம், தியானம், (16) நாமாவளி என்று இருக்கிறது. இவற்றில் சேராமல் மிகவும் சக்தி வாய்ந்தது பதஞ்சலி முனிவர் சொன்ன சிந்தாமணி மந்திரம்.

கேட்டதைத் தரும் சிந்தாமணி என்ற பழமொழி வழக்கத்தில் இருக்கிறது. அப்படிப்பட்ட குபேர சிந்தாமணி மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் குபேர காலத்தில் தகுந்த குருவிடம் உபதேசமாக பெற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை காலையில் ஜெபம் செய்து வாருங்கள். சிந்தாமணி மந்திரத்தால் லட்சுமி குபேரன் மகிழ்ந்து தனம் சேர்ப்பார்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் க்லீம் ஐம் உனபதுமாம் தேவஸக
கீர்த்திஸ்ச மணினா ஸக: ப்ராதுர் பூதேஸ்மி
ராஷ்ட்ரேஸ்மின் கீர்த்திம் வருத்திம் ததாதுமே
ஓம் குபேராய ஐஸ்வர்யாய தனதான்யாதிபதயே
தன விருத்திம் குருகுரு ஸ்வாஹா!

பனை ஓலையில் எழுத்தாணியால் எழுதி படிப்பதாலும் தாமிரத்தகட்டில் குபேர சக்கரமும் எழுதி ஐங்காயத்தைப் பூசி அதிகாலையில்108 தடவை ஜெபம் செய்து வர வீடும், தொழிலகமும் அபரிமிதமான செல்வத்தைச் சேர்க்கும் என்பது பெரியோர் வாக்கு-ரத்தின கோசர நூல்.


 
குபேரயோகம் உண்டாக குபேர ராஜமந்திரம்


ராஜாதி ராஜாய ப்ரசஹ்ய பொ ஹினே
நமோ வயமீனர ஸ்ரவணாய குரிமஹே!
ஸமேகா மாந் காமகாமய மக்யம்
காமேஸ்வரோ வைஸ்ரவணோ ததாது!
குபேராய வைஸ்ரவணாயா மகாராஜாய நமக!!


மந்திரத்தை 21 முறை சொல்ல
குபேரயோகம் ,உண்டாகும்

லட்சுமி குபேரன் மந்திரம்


வெள்ளிக்கிழமை சொல்லும் லட்சுமி குபேரன் மந்திரம்


ஸ்ரீதிரிபுர ரகஸ்யம் என்ற கதையில் உபகதையாக இத்துதி வருகிறது.
எந்த சுலோகத்தைச் சொல்லி வழிபட்டால் நலம் உண்டாகும்
என்று தேவர்கள் மகா லட்சுமியைக் கேட்டதற்கு தேவி பிரத்யட்சமாகி இந்த ஸ்ரீஸ்துதியைச் சொல்ல வேண்டும் என்று கூறி வாழ்த்தி மறைந்தாள்
தேவி. 16 வெள்ளிக்கிழமை காலையிலும் மாலையிலும் ஸ்ரீ கோலமிட்டு இத்துதியை கூறுபவர்களுக்கு லட்சுமி குபேரனின் அருட்பார்வை உறுதியாகக் கிடைக்கும்.

1.ஓம் நமோ லட்சுமியை மகாதேவ்யை பத்மாயை சததம் நம!
நமோ விஷ்ணு விலாசின்யை பத்மஸ்தாயை நமோ நம!!

2.த்வம் சாட்சாத் ஹரி ஷஸ்தா சுரே ஜேஷ்டா வரோத்பவா!
பத்மாட்சீ பத்ம சம்சா தாநா பத்ம ஹஸ்தா பராமயீ!!

3.பரமானந்ததா அபாங்கீ ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி!
அருணா நந்தினீ லட்சுமி மகாலட்சுமி, திரி சக்திகள்!!

4.சாம்ராஜ்யா சர்வ சுகதா நிதிநாதா நிதிப்ரதா!
நிதீச பூஜ்யா நிகமஸ்துதா நித்ய மகோன்னதி:!!

5.ஸம்பத்தி சம்மதா சர்வசுபகா சமஸ்து தேஸ்வரி!
ரமா ரட்சாகரீ ரம்யா ரமணீ மண்ட லோத்தமா!!

மந்திரங்களும் – பலன்களும்





1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.

2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.

3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.

4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.

5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.

6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.

7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.

8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.

9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.

10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.

11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.

12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.

13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.

14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.

15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.

16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.

17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.

18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.

19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.

20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.

21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.

22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.

23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.

24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.

25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.

26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.

27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.

28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.

29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.

30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.

31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.

32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.

33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.

34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.

35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.

36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.

37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.

38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.

39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.

40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.

41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.

42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.

43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.

44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.

45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.

46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.

47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.

விரும்பியவருடன் விரைவில் திருமணம் நடக்க மந்திரம்




குத்து விளக்கு ஏற்றி குங்குமம், பூ வைத்து, கோலம் போட்ட பலகையில் வைத்து,

'ஓம் ஸ்ரீகாத்யாயினி மகாமாயே மகாயோகின்யை ஈஸ்வரி! நந்தகோப
ஸீதம் தேவி பதிம்தே குருவே நமஹ'

என்று சொல்லிக் கொண்டே 12 முறை பிரதட்சணம் செய்தால், விரும்பிய வரன் தானாகவே அமைந்து விரைவில் திருமணம் நடக்கும். இதை தினமும் செய்தாலும் நல்லது. முடியாவிட்டால் வெள்ளிக்கிழமை மட்டும்கூட செய்யலாம். முடிந்தால் நைவேத்தியமும் செய்யலாம்.

எண்ணியதெல்லாம் ஈடேற...சுப்ரமண்ய மந்திரம்




ஸிந்தூராருணமிந்துகாந்தி வதனம் கேயூரஹாராதிபி:
திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம்
அம்போஜாபய சக்திகுக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம்
ஸுப்ரமண்யமுபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்

- பிரம்மன் அருளிய சுப்ரமண்ய கவசம்

சிந்தூரம் போல் செம்மையான தோற்றம் கொண்ட சுப்ரமண்யரே நமஸ்காரம். சந்திரன் போல் பேரெழிலுடன் விளங்கும் சுப்ரமண்யரே நமஸ்காரம்.

தோள்வளை, முத்தாரம் போன்ற அழகுமிகு ஆபரணங்களை அணிந்தவரே நமஸ்காரம். சுவர்க்க லோகம் போன்ற சுகமான வாழ்வை, இம்மையிலேயே அருளும் சுப்ரமண்யரே நமஸ்காரம்.

சகல நலன்களும் கிட்ட...நடராஜ மந்திரம்




யத்தர்ஸனம் ஜன்ம பாக்யம் - மோக்ஷ
லிங்கஞ்ச நித்யம் புரோவர்த்தி யஸ்ய
யத்வந்தனம் து:கஹாரி - புண்ய
மக்பஸ்சகாங்கம் ஸிரஸ்யாததானம்


ஸ்ரீ சித்ஸபேஸ தசகம்

நடராஜப் பெருமானே தங்கள் தரிசனம் கண்டதே நான் இப்பிறவி எடுத்ததன் நற்பயன். தங்களுக்கு நமஸ்காரம். தங்களுக்கு முன்னால் தினமும் விளங்கும் மோட்ச லிங்கத்திற்கும் நமஸ்காரம். தங்கள் அருளால் எனது அனைத்து துக்கங்களும் விலகுகின்றன. பரம பவித்ரமான கங்கையைத் திருமுடி மீது தரித்திருக்கும் சித்சபேஸனே, நமஸ்காரம். உம்மை என் மனதாலும், வாக்காலும் துதிக்கிறேன். எனக்கு என்றென்றும் நிம்மதி அருள்வீராக.

வியாபார லாபம், உத்யோக லாபம், மன சாந்தி பெற...




நமச்சிவாய ருத்ராய நமஸ்தே விஸ்வமூர்த்தயே
நமஸ்தே நீலகண்டாய நமஸ்தே சந்த்ர மௌள்யே
த்ரிவர்கபலதாத்ரேச த்ரயீமூர்த்தே நமோ நம
நமோ ஜீவாத்மநே துப்யம் நமஸ்தே பரமாத்மநே

ஸார முனிவர் இயற்றிய தாயுமானவர் ஸ்தோத்திரம்

துயரத்தைப் போக்கும் ருத்ர மூர்த்தியாக விளங்கும் தாயுமானவரே, நமஸ்காரம். மங்களத் திருவுருவே நமஸ்காரம். (தொண்டையில் விஷம் தாங்கியதால்) நீலகண்டராக விளங்கும் கருணைப் பரம்பொருளே நமஸ்காரம். சந்திரனை தலையில் தரித்த பெருந்தகையே நமஸ்காரம். எல்லா நன்மைகளையும் அளிப்பவரும், வேதரூபமாகத் திகழ்பவருமான ஈசனே நமஸ்காரம். அனைத்து ஜீவன்களுக்கும் பரமாத்மாவே நமஸ்காரம்.

இம்மந்திரத்தை 21 முறை ஜெபித்து வர உங்கள் குடும்பத்தில் நிம்மதி நிலவும். வியாபாரம், உத்யோக இனங்களில் மேன்மை கிட்டும்; மனதில் அமைதி நிறையும்.

உடல்நலம், கீர்த்தி,எல்லா ஐஸ்வர்யமும் பெற...




ஆரோக்யம் ப்ரதாது நோ தினகரஹ
சந்த்ரோ யஸோ நிர்மலம்
பூதிம் பூமிஸுதஹ ஸுதாம்ஸுதனய
ப்ரஜ்ஞாம் குருர்கௌரவம்
காவ்யஹ கோமளவாக்விலாஸமதுலம்
மந்தோ முதம் ஸர்வதா
ராஹுர் பாஹுபலம் விரோதஸமனம்
கேதுஹு குலஸ்யோன்னதிம்

நவக்ரஹ ஸ்தோத்திரம்

சூர்ய பகவானே எனக்கு நல்ல உடல்நலம் அருள்வீராக. சந்திரனே புகழ் சேர்ப்பீர்களாக.
அங்காரகனே செல்வம் வழங்குவீராக.
புதன் பகவானே நல்ல புத்தியை அருள்வீராக.
வியாழ பகவானே நல்ல மதிப்பை நல்குவீர்களாக. சுக்கிரனே, மிகவும் சாதுர்யமானதும், பிறரைக் கவரக்கூடியதுமான பேச்சுத் தன்மையை அருள்வீராக. சனி பகவானே எப்போதும் சந்தோஷம் தருவீராக. வீரத்தையும், எதிரி நாசத்தையும் ராகுவே வழங்குவீராக. குலத்தின் மேன்மையையும் அபிவிருத்தியையும் கேதுவே நல்குவீராக.

இம்மந்திரத்தை 9 முறை ஜெபித்து வர நவகிரகங்களும் நன்மைகளை அருள்வார்கள்)

வராஹ மந்திரம்



கொடிய நோய்கள் விலக, திருஷ்டி தோஷங்கள் தொலைய...வராஹ மந்திரம்


ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்
கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்

- வராஹ ஸ்லோகம்

சுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை ஒத்தவரே, வராஹ மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே, ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, வராஹ மூர்த்தியே நமஸ்காரம்.

இம்மந்திரத்தை 21 முறை ஜெபித்து வர கொடிய நோய்கள் விலகும்; திருஷ்டி தோஷங்கள் தொலையும்.)

வறுமை ஒழிந்து செல்வ வளம் பெருக...வித்யாலக்ஷ்மி மந்திரம்




வித்யாலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து ப்ரஹ்ம
வித்யாஸ்வரூபிணீ
வித்யாம் தேஹி கலாம் தேஹி, ஸர்வகாமாம்ச
தேஹி மே
தனலக்ஷ்மி நமஸ்தே(அ)ஸ்து ஸர்வதாரித்ர்ய
நாசினி
தனம் தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகாமாம்ச
தேஹி மே


வித்யாலட்சுமி வடிவில் விளங்கும் தேவியே நமஸ்காரம். ப்ரம்ஹ வித்யா வடிவில் விளங்கும் அன்னையே, சகல வித்யைகளையும் சகல கலைகளையும் கற்றறிய அருளும் அம்மையே நமஸ்காரம்.
என் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தந்தருள்வாய் அம்மா. தனலட்சுமியாய் விளங்கி, எல்லவகை வறுமைகளையும் அழித்து என்னை ரட்சிப்பவளே நமஸ்காரம்.
நிறைய தனங்களையும், புகழையும் தந்து என் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தந்தருள்வாய் தாயே!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும்இம்மந்திரத்தை 21 முறை ஜெபித்து வர வறுமை நீங்கி, செல்வ வளம் பெருகும்.

அரசு வேலை கிடைக்க சூரியமந்திரம்...



ஓம் ஹ்ரௌம் ஸ்ரீம் ஆம் ஆதித்யாய ஸ்வாஹா

இதை ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் அமைந்த சூரிய ஹோரையில் சிவபெருமானின் கோவிலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

பின்பு தினமும் அதே நேரத்தில் நமது வீட்டிலிருந்தபடியே, சூரிய தரிசனம் செய்துவிட்டு, 24 அல்லது 48 என்ற எண்ணிக்கையில் ஜபத்தை கிழக்கு முகமாக அமர்ந்து செய்துவர வேண்டும். 108 நாட்கள் செய்து வர வேண்டும். அந்த 108 நாட்களும் அசைவ உணவையும், கருப்பு நிற ஆடைகள் அணிவதையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

நாக தோஷங்கள் நீங்க, விஷ ஆபத்துகள் விலக...




ஓம் அனந்தம் வாஸுகிம் சேஷம் பத்மநாபம்
ஸகம்பலம்
ஸங்கபாலம் த்ருதராஷ்டிரம்: தட்சகம் காளியம்
ததா:
ஏதானி நவ நாமானி சமகாத்மனாம் சாயங்காலே
படேந்நித்யம்
ப்ராதாகாரல விசேஷதக நஸ்யவிஷ பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீபவேத்!
நாகராஜ துதி

அனந்தன், வாசுகி, ஆதிசேஷன், பத்மநாபன், கம்பலன், சங்கபாலன், த்ருதராஷ்டிரன், தட்சகன், காளியன் முதலான ஒன்பது நாக ராஜாக்களே நமஸ்காரம். ராகு-கேது கிரகங்கள் மற்றும் பிற நாக தோஷங்களை விலக்கி நற்கதி அருள்வீராக. நமஸ்காரம்.

(தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் இந்த ஸ்லோகத்தை மூன்று முறை சொல்லி வந்தால் நாக தோஷங்கள் விலகும்.)

பிரச்சனையை தீர்க்கும் சரபேஸ்வரர் மந்த்ரம்




ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய சூட்சும பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர மந்த்ர கவசத்தை ஓதி வரவும் (குறைந்தது தினமும் 21 முறை ) தக்க நிவாரணம் கிடைக்கும் .

ஓம்"நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே!

இந்த திவ்ய மந்த்ர கவசத்தை சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை நீங்கள் உணரலாம், பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம். அனைத்து நேரங்களிலும் உங்களின் கையில் இருக்கட்டும்.

பைரவர் மந்திர வழிபாடு


ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும், இலுப்பை எண்ணை, விளக்கு எண்ணை, தேங்காய் எண்ணை, நல்லஎண்ணை, பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.

ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.

அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும்.

சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.

தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணை, விளக்குஎண்ணை, தேங்காய் எண்ணை, நல்லஎண்ணை, பசு நெய் ஆகும். இவற்றைத் தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.
ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.

வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும், தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது.

தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்த, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.

தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.

ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச்செழிப்பைத் தரும் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

பவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். 9-வது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தில் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

சித்திரை பரணி, ஐப்பசி பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில்தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.

தை மாதம் செவ்வாய்க் கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்

தீப திரிகளும்,பயன்களும்





குத்துவிளக்கிற்குபயன்படுத்தும்எண்ணெயைபொறுத்து
பலன்கள் வேறுபடுவதைப்போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.

*பருத்திபஞ்சினால் ஏற்றப்படும்திரியால்
குடும்பம்சிறக்கும், நற்செயல்கள்நடக்கும்.

*வாழைத்தண்டின்நாரில் செய்ததிரியால் முன்னோர்சாபம், தெய்வகுற்றங்கள் நீங்கி அமைதிஉண்டாகும்.

*தாமரைத்தண்டுநூலால் செய்யப்பட்டதிரியால்முன்
வினைப்பாவங்கள்நீங்கி, நிலைத்தசெல்வம்கிடைக்கும்.

*வெள்ளைஎருக்கம்பட்டை மூலம்செய்யப்படும் திரியால்
செல்வம்பெருகும்.

*புதியமஞ்சள்துணியால்செய்யப்பட்டதிரியால்அம்பாளின்அருளால்நோய்கள்குணமாகும்.

*சிவப்புவண்ணதுணியால்திரிக்கப்பட்டதிரிகுழந்தையின்மைதொடர்பானதோஷம்நீங்கும்.

*வெள்ளைதுணிதிரியால்அனைத்துநற்பலன்களும்
கிடைக்கும்.

இந்ததுணியின்மீது பன்னீர்தெளித்து காயவைத்து பின்பு
திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது. -

51 விநாயகர் வடிவங்களும் பலன்களும்




51 விநாயகர் வடிவங்களும்
அந்த வடிவங்களை வணங்குவதால் நாம்அடையும் பலன்களும்

1. ஏகாக்ஷர கணபதி: பரிபூரண சித்தி.
2. மகா.கணபதி: கணபதி அருள் கிடைக்கும்
3. த்ரைலோக்யமோஹன கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.
4. லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி
5. ருணஹரள கணபதி: கடன் நிவர்த்தி.
6. மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம்.
7. ஹரித்ரா கணபதி: உலக வசியம்.
8. வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம்.
9. நிதி கணபதி: நிதி ப்ராப்தி.
10. புஷ்ப கணபதி: தானிய விருத்தி.
11. பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு.
12. சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.
13. சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம்.
14. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன்.
15. குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.
16. ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம்.
17. ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி.
18. ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.
19. விஜய கணபதி: வெற்றி.
20. அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.
21. ச்லேதார்க்க கணபதி: மாலா மந்திரம்.
22. உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம்.
23. போக கணபதி: சகலலோக ப்ராப்தி.
24. விரிவிரி கணபதி: விசால புத்தி.
25. வீரகணபதி- தைரியம்.
26. சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி.
27. கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி.
28. விக்னராஜ கணபதி: ராஜயோகம்.
29. குமார கணபதி: மாலா மந்திரம்.
30. ராஜ கணபதி: மாலா மந்திரம்.
31. ப்ரயோக கணபதி: மாலா மந்திரம்.
32. தருண கணபதி: தியானயோக ப்ராப்தி.
33. துர்கா கணபதி: துக்க நிவாரணம்.
34. யோக கணபதி: தியானம்.
35. நிருத்த கணபதி: கலா பிவிருத்தி.
36. ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல்.
37. புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.
38. நவநீத கணபதி: மனோவசியம்.
39. மோதக கணபதி: சம்பூர்ண பலன்.
40. மேதா கணபதி: மேதா பிவிருத்தி.
41. மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.
42. குரு கணபதி: குருவருள்.
43. வாமன கணபதி: விஷ்ணு பக்தி.
44. சிவாவதார கணபதி: சிவபக்தி.
45. துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.
46. ரக்த கணபதி: வசிய விருத்தி.
47. அபிஷ்டவாத கணபதி: நினைத்ததை அடைதல்.
48. ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம்.
50. மகா கணபதி: ப்ரணவமூலம்.
51. வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை

விபத்து ஏற்படாதிருக்க...பாவங்கள் அழிய, காயத்ரிமந்திரம்



ஆதிசக்தே ஜகன்மாத: பக்தாநுக்ரஹ காரிணி
ஸர்வத்ர வ்யாபிகே நந்தே ஸ்ரீஸந்த்யே தேநமோஸ்துதே
த்வமேவ ஸந்த்யா காயத்ரீ, ஸாவித்ரீ சஸரஸ்வதீ
இதீக் கதிதம் ஸ்தோத்ரம், ஸந்த்யாயாம் பஹுபுண்யதம்
மஹாபாப ப்ரசமனம், மஹாஸித்தி விதாயகம்.


ஆதி சக்தியே, ஜகன்மாதாவே, நமஸ்காரம். பக்தர்களுக்கு அருள்புரிவதையே கடமையாகக் கொண்ட அன்னையே, காணும் இடம் யாவிலும் நீக்கமற நிறைந்திருக்கும் லோகமாதாவே, ஸந்த்யா தேவியே நமஸ்காரம். நீயே காயத்ரி, ஸாவித்ரி, ஸரஸ்வதி ஆகிய அற்புத திரு உருவங்களாகத் திகழும் பரம்பொருளே நமஸ்காரம்.

இம்மந்திரத்தை 21 முறை தினமும் மாலை வேளைகளில் ஜபித்து வர, பாவங்கள் அழிந்து புண்ணியமும், பலவித சித்திகளும் கிடைக்கும். அதோடு விபத்து பாதிப்புகளும் நேராதிருக்கும்.)

தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்



தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதனைச் செய்தால் வாழ்வில் யோகம் வந்து சேரும்.

சித்திரை - நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,
தயிர் சாதம், பலகாரம்
வைகாசி - பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்
ஆனி - தேன்
ஆடி - வெண்ணெய்
ஆவணி - தயிர்
புரட்டாசி - சர்க்கரை
ஐப்பசி - உணவு, ஆடை
கார்த்திகை - பால், விளக்கு
மார்கழி - பொங்கல்
தை - தயிர்
மாசி - நெய்
பங்குனி - தேங்காய்

இதே போல, 7 நாட்களுக்கும் கூட தானம் இருக்கிறது.

ஞாயிறு - பொங்கல், பாயாசம்
திங்கள் - பால்
செவ்வாய் - வாழைப்பழம்
புதன் - வெண்ணெய்
வியாழன் - சர்க்கரை
வெள்ளி - கல்கண்டு
சனி - நெய்

வலம்புரி சங்கு பூஜையால் ஏற்படும் நன்மைகள்!




வலம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங்களும் அகன்றுவிடும்.

சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்ம ஹத்யாதிகம் தஹேத் என்பது வேதவாக்கு.

வீடு கட்டுபவர்கள் கைப்பிடி அளவுள்ள வலம்புரிச் சங்கை நிலை வாசலில் வைத்து, வாஸ்து விதிப்படி சங்குப் பதிப்பு முறை செய்துவிட்டால், அந்த வீடு மூன்று தலைமுறைக்கு செல்வச் செழிப்போடு குபேர சம்பத்துடன் விளங்கும்

கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, யாக சாலைகளில் எண்வகை மங்களப் பொருட்களில் ஒன்றாக வலம்புரிச் சங்கும் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது.

அதேபோன்று, கார்த்திகை மாத சோமவார (திங்கட்கிழமை) அபிஷேக காலங்களில் 108 சங்குகளுக்கு நடுவில் வலம்புரிச் சங்கு ஒன்றை வைத்து, சிவபெருமானாக வர்ணிக்கப்பட்டு பூஜிக்கப்படும். அபிஷேக ஆராதனைகள் செய்த பிறகு, சங்கு தீர்த்தத்தை நம் மீது தெளிப்பார்கள். சங்கு நீர் உடலில் பட்டாலே அனைத்து துர்சக்திகளும் நம்மை விட்டு விலகும் என்கிறது சாஸ்திரம்.

வலம்புரிச் சங்கு வீட்டில் இருந்தால் தோஷங்கள், துர்சக்திகள் நெருங்காமல் வீடு பாதுகாப்பாக இருக்கும்; மற்றவர்கள் பொறாமையால் வைக்கும் ஏவல்கள் நம்மை நெருங்காமல் விலகிவிடும் என்பது நம்பிக்கை. நீண்ட ஆண்டுகளாக செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் தடைபட்டு வருந்தும் பெண்கள், 8 செவ்வாய்க்கிழமைகள் வலம்புரிச் சங்கில் பால் வைத்து, அங்காரகனுக்கு செவ்வரளி மலர்களால் 108 நாமாவளி அர்ச்சனை செய்தால், கைமேல் பலன் கிடைக்கும்.

பிறந்த குழந்தைகள் தொடர்ந்து அழுது கொண்டிருந்தால் சுத்தமான பாலை சங்கில் ஊற்றிவைத்து, விநாயகரை வணங்கி ஒரு மணி நேரம் கழித்துக் கொடுத்தால் பலன் கிடைக்கும்.

கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர 16 சங்கு வடிவங்களைக் கோலமாகப் போட்டு, பவுர்ணமி இரவில் குங்குமத்தால் அர்ச்சனை செய்து, குளிகை காலத்தில் கடன் கொடுத்தவரை சந்தித்து சிறிதளவு பணத்தைத் திரும்பக் கொடுத்தால், விரைவிலேயே முழுக்கடனும் அடைபடும்.

சொந்தமான பழைய வீடு எவருக்கும் பயன்படாமல், விற்கவும் முடியாமல் பாழடைந்து கிடந்தால்... வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில், நடுவீட்டில் பிரம்ம ஸ்தானத்தில் வலம்புரிச் சங்கை வைத்து, அதில் வாஸ்து பகவானை எழுந்தருளச் செய்து, மஞ்சள், துளசி இட்ட நீரை வைத்து பூஜிக்கவேண்டும். பிறகு சங்கு தீர்த்தத்தை வேப்பிலையின் உதவியோடு வீடு முழுவதும் தெளிக்கலாம். அத்துடன், செப்பு நாணயம் ஒன்றை மஞ்சள் துணியில் முடிந்து, ஈசான்ய பாகத்தில் கட்டிவிட்டால், விரைவில் அந்த வீட்டை விற்கவோ புதுப்பிக்கவோ நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றிபெறும்.

குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் வலம்புரிச் சங்கில் பால், குங்குமப்பூ இட்டு சந்தான கணபதியை வரித்து, பூஜையை செய்து, 48 தினங்களுக்கு கணவருடன் சேர்ந்து அருந்திவந்தால் பலன் கிடைக்கும். கோயில்களில் நடைபெறும் சங்காபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டு வழிபட தோஷங்கள் விலகும்; செல்வம் சேரும்.

ஒருவர் தமது நட்சத்திர அதிதேவதையையும், லட்சுமிகுபேரனையும் யோக எண் மற்றும் (சிறிய) பட உருவில் வலம்புரிச் சங்கில் வைத்து, சில காசுகளும் போட்டு வைத்து தினமும் வழிபட, அபரிமிதமான செல்வச் சேர்க்கை உண்டாகும்.

யந்திரமும் அதன் வகைகளும்




எந்திரம் என்பது இயக்குதல்-கருவி, பொறி என பொருள்படும்.
அதாவது வரைகளும் (கோடுகளும்), பீஜம் (எழுத்துக்கள்) முதலியவற்றை முறைப்படி வரையப்பட்டு வழிபடப்படும் சக்கரம் எந்திரம் எனப்படும்.

. மந்திரம் உயிர் போன்றது, எந்திரம் பிராணனை போன்றது, பிம்பம் உடலினை போன்றது. இத்தகைய எந்திரங்கள்

1.மூல எந்திரம், 

2.பூஜா எந்திரம், 
3.தாபன எந்திரம்,
4.தாரண எந்திரம், 

5.ரட்சா எந்திரம், 
6.பிரயோக எந்திரம்,
7.பிரயோகார்த்த பூசன எந்திரம், 

8.சித்திப் பிரத எந்திரம்,
9.முத்தொழில் சக்கரம், 

10. ஐந்தொழில் சக்கரம், 
11.ஐம்பூத சக்கரம்,
12.ஏரொளி சக்கரம், 

13. சட்கர்ம சக்கரம்,
14.அஷ்டகர்ம சக்கரம், 

15.அறாதாரா சக்கரம், 
16.சிவ சக்கரம்,
17.சிவகோணம், 

18.சக்தி சக்கரம்,
19.சக்திகோணம், 

20.கால சக்கரம், 
21.ராசி சக்கரம்,
22.சர்வதோபத்ர சக்கரம், 

23.கசபுட சக்கரம், 
24.முக்கோண
சக்கரம்,
25.சதுரசிர சக்கரம், 

26.ஐங்கோண சக்கரம்,
27.அறுகோண சக்கரம், 

28.எண்கோண சக்கரம்,
29.நவகோண சக்கரம், 

30.விந்துவட்ட சக்கரம், 
31.ரவி சக்கரம், 
32.பிறைமதி சக்கரம்,
33.நாற்பத்து முக்கோண சக்கரம், 

34.சம்மேளன சக்கரம்,
35.திருவம்பல சிதம்பர சக்கரம், 

36.பதினாறு பத சக்கரம்,
37.இருபத்தைந்து பத சக்கரம், 

38.முப்பத்தாறு பத சக்கரம்,

39.என்பதொரு பத சக்கரம், 

40.அறுபத்தி நான்கு பத சக்கரம், முதலான பல சக்கரங்களும் அதுமட்டும் அன்றி ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனியே சிறப்பான சக்கரங்கள் பல உள்ளன.அவை

41.வாலை சக்கரம், 

42.புவனை சக்கரம், 
43.திரிபுரை சக்கரம்,
44.புவனாபதி சக்கரம்,

45.சாம்பவி மண்டல சக்கரம்,
46.வயிரவ சக்கரம், 

47.நவாக்கரி சக்கரம், 
48.நவகிரக சக்கரம்,
49.சுதர்சன சக்கரம், 

50.விஷ்ணு சக்கரம், 
51.நரசிம்ம சக்கரம்,
52.சரப சாளுவ சக்கரம், 

53.விநாயக சக்கரம், 
54.வீரபத்திர சக்கரம்,
55.சண்முக சக்கரம், 

56.மிருத்யுஞ்சய சக்கரம், 
57.நீலகண்ட சக்கரம்,
58.சண்டி சக்கரம் 

59. துர்க்கை சக்கரம்
60.இராமர் சக்கரம் 
61.சீதா சக்கரம் 
62.லக்ஷ்மி சக்கரம், 
63.அனுமார் சக்கரம், 
64.ஸ்ரீ சக்கரம் முதலிய பல சக்கரங்களும் உள்ளன

அய்யனார் மந்திரம்...




ஓம் அரிகர புத்திராய, புத்திர லாபாய சத்துரு
விநாசகனாய மத கஜ வாகனாய பூத நாதாய அய்யனார் சுவாமியே நமக!!!!!

மந்திர வகைகள்



மந்திரம் என்ற சொல் நினைபவனை காப்பது என்ற பொருள் தரும்.
மந் - என்றால் நினைதல், அறிதல் என்றும், திரம் - காத்தல் என்றும் பொருள்படும்.
எனவே மந்திரம் என்பது நினைப்பவனை காப்பது என்று பொருள்படும்.

1. மூல மந்திரம்,
2. பீச மந்திரம்,
3. பஞ்ச மந்திரம்,
4. சடங்க மந்திரம்,
5. சங்கிதா மந்திரம்,
6. பத மந்திரம்,
7. மாலா மந்திரம்,
8. சம்மேளன மந்திரம்,
9. காயத்திரி மந்திரம்,
10. அசபா மந்திரம்,
11. பிரணாப்பிரதிட்டா மந்திரம்,
12. மாதிருகா மந்திரம்,
13. மோன மந்திரம்,
14. சாத்திய மந்திரம்,
15. நாம மந்திரம்,
16. பிரயோக மந்திரம்,
17. அத்திர மந்திரம்,
18. விஞ்சை மந்திரம்,
19. பசிநீக்கு மந்திரம்,
20. விண்ணியக்க மந்திரம்,
21. வேற்றுரு மந்திரம்,
22. துயில் மந்திரம்,
23. திரஸ்கரிணீ மந்திரம்,
24. சட்கர்ம மந்திரம்,
25. அஷ்ட கர்ம மந்திரம்,
26. பஞ்சகிருத்திய மந்திரம்,
27. அகமருடண மந்திரம்,
28. எகாஷர மந்திரம்,
29. திரயஷரி மந்திரம்,
30. பட்சாஷார மந்திரம்,
31. சடஷர மந்திரம்,
32. அஷ்டாஷர மந்திரம்,
33. நவாக்கரி மந்திரம்,
34. தசாஷர மந்திரம்,
35. துவாதசநாம மந்திரம்,
36. பஞ்சதசாக்கரி மந்திரம்,
37. சோடஷாஷரி மந்திரம்,
38. தடை மந்திரம்,
39. விடை மந்திரம்,
40. பிரசாத மந்திரம்,
41. உருத்திர மந்திரம்,
42. சூக்த மந்திரம்,
43. ஆயுள் மந்திரம்,
44. இருதய மந்திரம்,
45. கவச மந்திரம்,
46. நியாச மந்திரம்,
47. துதி மந்திரம்,
48. உபதேச மந்திரம்,
49. தாரக மந்திரம்,
50. ஜெபசமர்பண மந்திரம்,
51. ஜெப மந்திரம் என பலவகைப்படும்.
இவையன்றி
52. நீலகண்ட மந்திரம் ,
53. மிருத்யுஞ்சய மந்திரம் ,
54. தஷிணாமூர்த்தி மந்திரம் ,
55. சரப மந்திரம் ,
56. வீரபத்ர மந்திரம் ,
57. பைரவ மந்திரம் ,
58. விநாயக மந்திரம் ,
59. சண்முக மந்திரம் ,
60. நரசிங்க மந்திரம் ,
61. நவகிரக மந்திரம் ,
62. வாலை மந்திரம் ,
63. புவனை மந்திரம் ,
64. திரிபுரை மந்திரம் ,
65. துர்க்கை மந்திரம்,
66. அசுவாரூடி மந்திரம்,
67. சப்தமாதர் மந்திரம்,
68. முப்பத்துமுக்கோடி தேவர்கள் மந்திரம்,
69. பதினெண் கண மந்திரம்,
70. யோகினியர் மந்திரம்,

காலக் கடவுளர் முதலாக உள்ள எல்லாக் கடவுளருக்கும் தனித் தனியே சிறப்பாய் உள்ள மந்திரங்களும், சல்லிய தந்திராதி சித்த மந்திரங்களும், திராவிடாதி லௌகீக தேசத்தில் ( நமது பாரத தேசத்தில் ) உள்ள பாஷைகளில்
( மொழிகளில் ) உள்ள மந்திரங்கள் என்று எண்ணிறைந்த கணக்கில் அடங்காத மந்திரங்கள் உள்ளன.
இவ்வாறு பல திறன் உள்ளதாகவும், எண்ணிரைந்ததாகவும் உள்ள மந்திரங்கள் அனைத்தும் ஏழுகோடி மந்திரங்களில் அடங்கும்.
இதனை வடநூலார் சப்த கோடி மகா மந்திரம் என்பர்.
ஏழு கோடி மந்திரம் - ஏழு வகையான முடிபினை உடைய மந்திரம் என்பது பொருள்.
அவையாவன
1. நம,
2. சுவதா,
3. சுவாகா,
4. வௌஷடு,
5. வஷடு,
6. உம்,
7. படு என்பனவாம்.
இதற்க்கு இவ்வாறு இல்லாமல் ஏழுகோடியாகிய எண்களை கொண்ட மந்திரங்கள் என்றும் அவை இது இதுவென்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்பம் என்னும் வட நூலில் பொருள் கூறப்பட்டிருக்கிறது

Tuesday, September 16, 2014

மூலிகைப் பொடிகளின் (சூரணம்) பயன்கள்..!


சித்தர்கள் நமக்களித்த மூலிகைப் பொடிகளின் (சூரணம்) பெயர்களும், அதன் பயன்களும்..!

*அருகம்புல் பொடி:- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி:- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பொடி:- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி:- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி:- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி:- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி:- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி:- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி:- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி:- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி:- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி:- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி:- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி:- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி:- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி:- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி:- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி:- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி:- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி:- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி:- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி:- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி:- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி:- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி:- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி:- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பொடி:- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி:- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி:- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பொடி:- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி:- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி:- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி:- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி:- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி:- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி:- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி:- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி:- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி:- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி:- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி:- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி:- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி:- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி:- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி:- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி:- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி:- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி:- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி:- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி:- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி:- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி:- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி:- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

"மரு" (Skin Tag) உதிர...



Photo: "மரு" (Skin Tag) உதிர... 
Natural Skin Tag Remover....

இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும். 

இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம்.

அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை... 
அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். 

இதனை மரு மீது பூசவும். மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும். இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும். இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும்.

இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம்.

அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை...
அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும்.

இதனை மரு மீது பூசவும். மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும். இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்

MAHESHWAR ( మహేశ్వర్ )



Maheshwar town is built on the site of the ancient city of Somvanshya Shastrarjun Kshatriya, and was the capital of king Kartavirya Arjuna,(Shree Shastrarjun) who is mentioned in the Sanskrit epics Mahabharata and Ramayana. Maheshwar was known as Mahissati (Mahishamati in Sanskrit) in ancient times and was the capital of Southern Avanti. Maheshwar on the banks of the Narmada was capital of King Sahasrarjun.

One day the King and his 500 wives went to the river for a picnic. When the wives wanted a vast play area, the King stopped the mighty river Narmada with his 1000 arms. While they were all enjoying themselves, Ravana flew by in his Pushpak Vimana. Downstream, when he saw the dry river bed, he thought it was an ideal place to pray to Lord Shiva. He made a shivalinga out of sand and began to pray. When Sahasrajuna’s wives were done and they stepped out of the river bed, he let the waters flow.

The voluminous river flowed down sweeping Ravana’s shivalinga along, messing up his prayers. Furious, Ravana tracked Sahasrajuna and challenged him. Armed to the hilt the mighty Ravana was in for a huge surprise. The mighty Sahasrarjuna with the 1000 arms pinned Ravana to the ground. Then he placed 10 lamps on his heads and one on his hand. After tying up Ravana, Sahasrarjuna dragged him home and tied him up to the cradle pole of his son. A humiliated Ravana stayed prisoner until his release was secured.

Even today, the Sahasrarjun temple at Maheshwar lights 11 lamps in memory of the event.

In the late eighteenth century, Maheshwar served as the capital of the great Maratha lady Rajmata Ahilya Devi Holkar, ruler of the state of Indore. She embellished the city with many buildings and public works, and it is home to her palace, as well as numerous temples, a fort, and riverfront ghats (broad stone steps which step down to the river).





మహేశ్వర్ పట్టణం Somvanshya Shastrarjun క్షత్రియ యొక్క పురాతన నగరం యొక్క ప్రదేశంలో నిర్మించారు, మరియు సంస్కృత ఇతిహాసాలు మహాభారతం లో పేర్కొన్నారు మరియు రామాయణం ఎవరు రాజు కార్తవీర్యార్జున, (శ్రీ Shastrarjun) రాజధానిగా ఉండేది ఉంది. మహేశ్వర్ పురాతన కాలంలో Mahissati (సంస్కృతంలో Mahishamati) అని పిలుస్తారు మరియు దక్షిణ అవంతి రాజధాని అయింది. నర్మదా నది ఒడ్డు న మహేశ్వర్ రాజు Sahasrarjun రాజధానిగా ఉంది.

ఒక రోజు రాజు మరియు అతని 500 భార్యలు ఒక పిక్నిక్ కోసం నది వెళ్లిన. భార్యలు ఒక విస్తారమైన నాటకం ప్రాంతంలో కోరుకున్నారు, కింగ్ తన 1000 చేతులు శక్తివంతమైన నది నర్మదా ఆగిపోయింది. అవి ఆనందించే సమయంలో, రావణుడు తన Pushpak Vimana లో ఎగిరింది. దిగువ, అతను పొడి నది మంచం చూసినపుడు, అతను పరమశివుడికి ప్రార్థన ఆదర్శవంతమైన ప్రదేశం భావించారు. అతను ఇసుక శివలింగం తయారు మరియు ప్రార్థన ప్రారంభించింది. Sahasrajuna యొక్క భార్యలు చేసిన మరియు వారు బయటకు నది మంచం కలుగచేసుకొని ఉన్నప్పుడు, అతను వాటర్స్ ప్రవాహం తెలపండి.

భారీ నది అతని ప్రార్థనలను అప్ సమస్యను, కలిసి రావణుడి శివలింగం కైవసం డౌన్ ప్రవహించాయి. ఫ్యూరియస్, రావణ Sahasrajuna ట్రాక్ మరియు సవాలు విసిరాడు. శక్తివంతమైన రావణ ఒక భారీ ఆశ్చర్యం కోసం లో పిడి సాయుధ. 1000 చేతులు శక్తివంతమైన Sahasrarjuna నేల రావణ ఓడించాడు. అప్పుడు అతను తన తలలు మరియు తన వైపు ఒక 10 దీపాలను ఉంచుతారు. రావణ అప్ వేయడం తరువాత, Sahasrarjuna అతనిని ఇంటికి డ్రాప్ మరియు అతని కుమారుడు జన్మస్థలం పోల్ అతన్ని టైడ్. తన విడుదల దక్కించుకున్నారు వరకు అవమాన రావణ ఖైదీ బస.

నేటికి కూడా, మహేశ్వర్ లైట్లు ఈవెంట్ మెమరీ లో 11 దీపములు వద్ద Sahasrarjun ఆలయం.

పద్దెనిమిదవ చివరిలో శతాబ్దంలో, మహేశ్వర్ గొప్ప మరాఠా మహిళ రాజమాత అహల్యా దేవి హోల్కర్, ఇండోర్ రాష్ట్ర పాలకుడు రాజధానిగా వ్యవహరించింది. ఆమె అనేక భవనాలు మరియు ప్రజా పనులతో నగరం శృంగారమైన, మరియు అది ఆమె ప్యాలెస్, అలాగే అనేక దేవాలయాలు, ఒక కోట, మరియు నదీ కనుమల (నదికి పదవీవిరమణ ఇది విస్తృత రాతి మెట్ల) కు నిలయంగా ఉంది.

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...