Friday, May 3, 2013

பதினெண் சித்தர் யார் யார்?

சித்தர்களின் எண்ணிக்கையைப் பொதுவாகக் குறிக்குமிடத்துப் பதினெண்
சித்தர் என்று குறிப்பிடுவர். பதினெண் சித்தர் யார் யார்?
1. திருமூலர்,   
2. இராமதேவர்,  
3. கும்பமுனி, 
4. இடைக்காடர், 
5. தன்வந்திரி,
6. வான்மீகி,
7. கமலமுனி,
8. போகநாதர்,
9. குதம்பைச் சித்தர்,
10. மச்சமுனி,  
11. கொங்கணர்,
12, பதஞ்சலி, 
13. நந்திதேவர், 
14. போதகுரு,
15. பாம்பாட்டிச் சித்தர்.  
16. சட்டைமுனி, 
17. சுந்தரானந்த தேவர்,  
18. கோரக்கர்.
இது ஒரு பட்டியல்.
1. அகப்பேய் சித்தர்,
2. அழுகணிச் சித்தர்,
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர், 
4. சதோகநாதர், 
5. இடைக்காட்டுச் சித்தர்,
6. குதம்பைச் சித்தர், 
7. புண்ணாக்குச் சித்தர்.  
8. ஞானச்சித்தர், 
9. மௌனச் சித்தர், 
10. பாம்பாட்டிச் சித்தர், 
11. கல்லுளி சித்தர்,
12, கஞ்சமலைச் சித்தர்.
13. நொண்டிச் சித்தர்,
14. விளையாட்டுச் சித்தர்,
15. பிரமானந்த சித்தர், 
16. கடுவெளிச் சித்தர்,
17. சங்கிலிச் சித்தர்,
18. திரிகோணச்சித்தர்.
இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும்
அடங்குவர்.
1. வான்மீகர்,
2. பதஞ்சலியார், 
3. துர்வாசர்,
4. ஊர்வசி,  
5. சூதமுனி,
6. வரரிஷி, 
7. வேதமுனி, 
8. கஞ்சமுனி, 
9. வியாசர், 
10. கௌதமர் 
                     இது இன்னொரு  பட்டியல்.  பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.
1. காலாங்கி, 
2. கமலநாதர்,
3. கலசநாதர், 
4. யூகி, 
5. கருணானந்தர்,
6. போகர்,
7. சட்டைநாதர், 
8. பதஞ்சலியார், 
9. கோரக்கர், 
10. பவணந்தி,
11. புலிப்பாணி, 
12, அழுகணி,
13. பாம்பாட்டி,  
14. இடைக்காட்டுச் சித்தர், 
15. கௌசிகர்,
16. வசிட்டர், 
17. பிரம்மமுனி, 
18. வியாகர்,
19. தன்வந்திரி,
20. சட்டைமுனி, 
21. புண்ணாக்கீசர்,
22. நந்தீசர், 
23, அகப்பேய்,  
24. கொங்கணவர்,
25. மச்சமுனி, 
26. குருபாத நாதர், 
27. பரத்துவாசர், 
28. கூன் தண்ணீர், 
29. கடுவெளி,
30. ரோமரிஷி, 
31. காகபுசுண்டர்,
32. பராசரர். 
33. தேரையர்,
34. புலத்தியர், 
35. சுந்தரானந்தர்,
36. திருமூலர், 
37. கருவூரார், 
38, சிவவாக்கியர்,
39. தொழுகண், 
40. நவநாதர்
                          (அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர்,  எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர்,
ஐ. கோரக்க நாதர்)
 
 41. அஷ்டவசுக்கள்,
 42. சப்த ரிஷிகள்.
 
                                 இப்படி   சித்தர்கள்   பட்டியல்  கணக்கில்லாமல்  பெருகிக்கொண்டே செல்கிறது.  ஆயினும்   பதினெட்டுப்  புராணங்கள்,  பதினெட்டுப்  படிகள், பதினெண்  குடிமை,  பதினெண்  பாஷை என்று வரையறை செய்தது போல் சித்தர்களையும்  பதினெண்  சித்தர்களாக ஒரு வரையறை செய்தனர். சங்கப் புலவர்கள்   செய்த  நூல்கள்  பத்துப்பாட்டு,   எட்டுத்தொகை,  பதினெண் கீழ்க்கணக்கு  என்று  எண்ணிக்கையில் தொகுத்தது போலவே இப்பதினெண் சித்தர்  பாடல்களும்  பெரிய  ஞானக்கோவை என்ற நூலாகத் தொகுத்தனர். ஏனைய சித்தர் பாடல்கள் அவரவர் பெயராலேயே தொகுக்கப்பட்டன.
                         இந்தப் பதினெண் சித்தர் பாடல் தொகுதியினுள் அகப்பேய், அழுகணி, கடுவெளி,  குதம்பை, பாம்பாட்டி, சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், காகபுசுண்டர்,  ஞானசித்தர்,  கந்துளிச்  சித்தர், கஞ்சமலைச் சித்தர், இடைக் காட்டுச்  சித்தர்,  புண்ணாக்குச்  சித்தர்,  குதம்பைச் சித்தர், விளையாட்டுச் சித்தர், ஆகிய பாடல்கள் தொகுக்கப்பட் டன.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...