Friday, January 8, 2016

ஸ்ரீநெல்லையப்பர் கோயில்



திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், டவுன் எனும் பகுதியில் உள்ளது நெல்லையப்பர் கோயில். ச்வாமி ஸ்ரீநெல்லையப்பர். அம்பாள் ஸ்ரீகாந்திமதி.

  ஏழை அந்தணர் உலர்த்தியிருந்த நெல், மழையில் நனைந்து விடும் நிலையில், சிவபெருமான் வேலியிட்டுக் காத்தருளினார். எனவே அவருக்கு ஊருக்கு நெல்வேலி என்றும் சிவனுக்கு நெல்லையப்பர் என்றும் பெயர் அமைந்தது. 32 தீர்த்தங்களைக் கொண்ட பிரமாண்டக் கோயில் இது! ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் தேவாரம் பாடிய திருத்தலம்!

மூங்கில் வனமாகத் திகழ்ந்ததால் வேணுவனம் என்றும் வேணுவனநாதர் என்றும் அமைந்தது. உலக மக்களுக்காக உமையவள் தவமிருந்து சிவனருளைப் பெற்றாள் இங்கே. எனவே காந்திமதி அன்னை சக்தி வாய்ந்தவளாகப் போற்றப்படுகிறாள்!

 நெல்லை வேலியிட்டுக் காத்த தலத்தில் வந்து வேண்டினால் நம்மையும் நம் சந்ததியையும் காத்தருள்வார் என்பது ஐதீகம்! கேட்கும் வரங்களை கருணையுடன் தந்தருள்வாள் காந்திமதி என்பது நம்பிக்கை. இந்த ஊரில் பெண் குழந்தை பிறந்தால் காந்திமதி என்று பெயர் சூட்டுவது அதிகம்!

  கோயில் நேரம் :
 காலை 6 முதல் 12.30 வரை.
 மதியம் 4 முதல் இரவு 8.30 வரை.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...