Saturday, January 23, 2016

ராமேஸ்வரத்தில் உள்ள புனித தீர்த்தங்கள்!


ஸ்ரீராமபிரான் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவலிங்க பூஜை செய்து, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட தலம் ராமேஸ்வரம் எனும் புண்ணியபூமி!

22 புண்ணிய தீர்த்தங்களையும் அவற்றில் நீராடினால் கிடைக்கும் பலன்களையும் தெரிந்து கொள்வோம்!

 மகாலக்ஷ்மி தீர்த்தத்தில் நீராடினால், சகல ஐஸ்வரியங்களும்  பெருகும். சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி தீர்த்தங்களில் நீராடினால்,  இதுவரை சடங்குகளைச் செய்யாதவர்களும், சந்ததி இல்லாதவர் களும் நற்கதி பெறலாம்.

  சங்கு தீர்த்தத்தில் நீராடினால்,  நன்றி மறந்த பாவம் நீங்கும்.   சக்கர தீர்த்தத்தில் நீராடினால் தீராத நோயும் தீரும்.  சேது மாதவ தீர்த்தத்தில் நீராடினால்  செல்வம் கொழிக்கும்.    நள தீர்த்தத்தில் நீராடினால், இறையருளைப் பெற்று சொர்க்கத்தை அடையலாம்.  நீல தீர்த்தத்தில் நீராடினால்,  யாகம் செய்த பலனைப் பெறலாம். கவாய தீர்த்தத்தில் நீராடினால், மனவலிமையைப் பெறலாம்.

  கவாட்ச தீர்த்தத்தில் நீராடினால், தேக ஆரோக்கியம் உண்டாகும்.  கந்தமான தீர்த்தத்தில் நீராடினால், தரித்திரம் நீங்கும்.    பிரம்மஹத்தி விமோசன தீர்த்தத்தில் நீராடினால்,  பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். பில்லி சூனிய ஏவல்கள் அகலும்.  சந்திர தீர்த்தத்தில் நீராடினால், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம். சூரிய தீர்த்தத்தில் நீராடினால், ஞானமும் யோகமும் பெறலாம்.

  சாத்யாம்ருத தீர்த்தத்தில் நீராடினால், தேவதைகளின் கோபத்தில் இருந்து விடுபடலாம்.  சிவ தீர்த்தத்தில் நீராடினால்  சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம். சர்வ தீர்த்தத்தில் நீராடினால், அனைத்து யோகங்களும் கைகூடும்.  கயா, யமுனா மற்றும் கங்கா தீர்த்தங்களில் நீராடினால், - பிறவிப் பயனை அடையலாம்.

  நிறைவாக, கோடி தீர்த்தத்தில் நீராடினால், - மகா புண்ணியம்.

ஸ்ரீராமர், சிவலிங்க அபிஷேகத்துக்குப் பயன்படுத்திய தீர்த்தம் இது. சிவனாரின் அருளையும் ஸ்ரீராமரின் அருளையும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கும் மகா தீர்த்தம்!  இந்த தீர்த்தங்களைத் தவிர, கடலிலேயே கலந்திருக்கிறது அக்னி தீர்த்தம். இதில் நீராடிவிட்டே தரிசனத்துக்குச் செல்வது வழக்கம்!

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...