Monday, January 18, 2016

எது? உலக அதிசயம்.





ஒரு பெரிய குரூப்போடு நான் தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தேன். பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா. ஏன்? இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.


நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம். திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான Positions ல இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட. இந்த அதிசய சிற்ப்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை. இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப எவ்ளவு துல்லியமாக Measure செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.


ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம். யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழம்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.


இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது. இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது. உலகில் கிரேக்க, எகிப்து போன்ற பழம்கால நாகரீகங்களுக்கு முன்பே. ஸ்கேன் கருவி இல்லாமல் வயிற்றில் உள்ள குழந்தையை படம் பிடித்ததில் இருந்து. தொலைநோக்கி இல்லாது உலகம் உருண்டை என்பது முதல் ஓசோன் படலம் வரை. முதன் முதலில் உலகிற்கு சொன்னது நமது பாரத தேச முன்னோர்கள். நமது முன்னோர்களின் அறிவு உலக அதிசயம் அல்லவா. இதை போல் இன்னொன்றை இனி உருவாக்க முடியாது என்று இருப்பவையே உலக அதிசயங்கள்.


ஆக தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் அதில் சந்தேகம் இல்லை. ஆனால்? அது ஒன்றும் அதிசயம் கிடையாது. ஷாஜகானுக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே. ராணி உதையமதி தனது கணவர் பீம் தேவுக்காக தாஜ் மஹாலை விட அழகான, பிரும்மாண்டமான ஒரு நினைவு சின்னத்தை உருவாக்கியது உங்களில் எவ்ளவு? பேருக்கு தெரியும். அந்த நினைவு சின்னத்தின் பெயர் என்ன? தெரியுமா. ராணி கி வாவ். ஹிந்தியில் வாவ் என்றால் கிணறு என்று பொருள். கிணற்று வடிவத்தில் உள்ள கட்டிடங்கள் உலகில் மிக, மிக அபூர்வம். இந்தியாவில் கிணற்று வடிவில் உள்ள மிக பிரும்மாண்டமான அரண்மனை ராணி கி வாவ். இது எந்த அளவு பிரும்மாண்டமான கட்டிடம் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம். இந்த கட்டிடத்தின் உள். 30 கிலோ மீட்டர் நீள சுரங்க பாதை. ஆங்கிலத்தில் Tunnel என்று சொல்வார்கள். இந்த ராணி கி வாவ் இன்றைய குஜராத் மாநிலத்தில் சித்பூர் என்கிற ஊருக்கு அருகில் உள்ள பதான் pathan என்கிற ஊரில் இருக்கின்றது. இப்பொழுது கூட. நீங்கள் Googleளில் ராணி கி வாவ் என்று போட்டு பாருங்கள். ராணி கி வாவ் படங்களை பார்த்து விட்டு. நீங்கள் தாஜ் மஹாலை பார்க்கும் பொழுது தாஜ் மஹால் உங்களுக்கு ஜிஜூபியாக தெரியும்.


ராணி கி வாவ். வெறும் பீம் தேவருக்காக கட்டப்பட்ட நினைவு சின்னம் மட்டுமல்ல. அது ஒரு ஸ்ரீ மண் நாராயணன் கோவிலும் கூட. ஆம். ஆயிரம் ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோவில்.


இப்போ நம்ப மீண்டும். தாஜ் மஹால் பக்கமே வருவோம். தாஜ் மஹாலை பார்த்து விட்டு திரும்பி வரும் பொழுது. பஸ்ஸில் அனைவரும் இதைவிட அழகான கட்டிடம் இந்த உலகில் எதுவுமே இல்லை என்பதை போலவும். எந்த ஒரு பெண்ணும் தனது கணவனுக்காக ஒரு குடிசை கூட கட்டவில்லை என்பதை போல் பேசி கொண்டனர். நான் உடனே. எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில். இந்த ராணி கி வாவ் பற்றி சொன்னேன். அதை கேட்டவுடன். ஜனவரி மாத டெல்லி குளிரில் கூட உறையாதவர்கள். நான் சொன்ன அந்த தகவலை கேட்டவுடன் அப்டியே அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்கள். ஏற்க்கனவே குஜராத் சுற்றுலா போனவர்கள் அதை பார்க்காமல் விட்டு விட்டோமே என்று வருத்தப்பட்டார்கள். அந்த பேட்ச்சில் ஒரு குஜராத் குடும்பம் கூட வந்து இருந்தார்கள். அவர்களுக்கும் இந்த ராணி கி வாவ் பற்றி நான் சொல்லும் வரை தெரியாது. பின்னர் அனைவரும் இன்டர்நெட்டில் ராணி கி வாவ் படங்களை பார்த்து பிரம்மித்து போனார்கள்.


அன்னியர்களின் தாக்குதலுக்கு பலமுறை உள்ளாகியும் இந்த ராணி கி வாவ் இன்றும் இத்தகைய ஒரு அழகு, பிரும்மாண்டத்தோடு இருக்கின்றது என்றால். அது சாதாரண விஷயம் அல்ல. நீங்க எல்லாம் மைன்ட் வாய்சில் நினைப்பது புரிகிறது. வரும் ஜுன், ஜுலைக்கு மேல். குஜராத் சுற்றுலாவை நமது ஹரிகேசா டிராவல்ஸ் செய்ய போகிறது. அப்ப நீங்க என்னுடன் இந்த ராணி கி வாவின் பிரும்மாண்டத்தை கண்டு மகிழலாம்.


நமது நாட்டின் மீது படை எடுத்த முகல், வெள்ளையர்கள் போன்ற அந்நியர்களை மட்டும் நாம் குறை சொல்வதில் ஒரு பயனும் இல்லை. முன்னோர்கள் நமக்கு நிறையவே நிறைகளை விட்டு சென்று இருக்கிறார்கள். இந்த ராணி கி வாவ் போன்ற நமக்கு. அன்னியர் தாக்குதலில் இருந்து தப்பித்தது போக மிஞ்சியுள்ள கலை பொக்கிசங்களை நாம் போற்றி, பாதுகாக்க வேண்டும்.


நாம் அனைவருமே காலம், காலமாக ஜாதி, மொழி ரீதியாக பிரிந்தே இருக்கிறோம். அணைத்து இந்தியர்களும் ஒற்றுமையாக இருந்து இருந்தால். அரேபியர்கள் நம்மை 800 ஆண்டுகளும், ஐரோப்பியர்கள் நம்மை 500 ஆண்டுகளும் ஆண்டு இருப்பார்களா? மாலிக்காகப்பூர் தமிழத்தின் மீது படை எடுத்து வந்தான். தஞ்சை, மதுரை போன்ற கோவில் செல்வங்களை கொள்ளை அடித்தான். சரி. அவன் இங்கு வந்ததற்கு காரணம் யார்? அவன் தானாகவா வந்தான்.


சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் இருவரில் யார் அடுத்து பாண்டிய சிம்மாசனத்தில் அமர்வது என்பதில் பங்காளி சண்டை. சுந்தர பாண்டியன் வீர பாண்டியனை தோற்க்கடிக்கிறான். வீர பாண்டியன் மாலிக்காகபூரிடம் உதவி கேட்கிறான். மாலிக்காகப்பூர் என்ன? செய்தான். முதலில் சுந்தர பாண்டியனை அடித்தான். பின்னர் வீர பாண்டியனையும் அடித்தான். அதன் பின்னர் தான் கோவில்களில் அவன் கொள்ளை அடித்தான். இதை நமது இந்திய மன்னர்கள் யாருமே செய்யவில்லையா. விஜயாலயன் பல்லவ மன்னனை நம்ப வைத்து கழுத்து அறுக்கவில்லை. ராஜேந்திர சோழன் பாண்டிய மன்னன் மீது உள்ள கோபத்தில். ஒட்டுமொத்த மதுரையையும் எரித்து தீக்கு இரையாக்கவில்லை. சங்க தமிழ் வளர்த்த, ம் மீனாக்ஷி அம்மன் அவதாரம் செய்த மதுரை மண்ணின் மைந்தர்களை ராஜேந்திரன் அடிமைபடுத்தவில்லை.


பிறருக்கு வந்தால் அது தக்காளி சட்னி, நமக்கு வந்தால் அது ரத்தமா? என்ன. விஜயாலயன், ராஜேந்திரன் முதலானோர் ஹிந்துக்கள் என்பதால். அவர்கள் கோவில்களை மட்டும் ஒன்றும் செய்யவில்லை. இல்லையென்றால். மாலிக், கஜினி, கில்ஜி, தைமூர், கோரி, ஔரங்கசீப் போன்ற பல அரேபிய தளபதிகள், மன்னர்கள் செய்ததை தான் அவர்களும் செய்து இருப்பார்கள்.


அக்கால மன்னர்கள் செய்த தவறுகளுக்கு நாம் இன்றைய மக்களை குறை சொல்லி ஒரு பயனும் இல்லை. நமது நாட்டின் பொக்கிசங்களை பாதுக்கப்பது, வரும் காலத்தில் நமது பாரத தேசத்தை உலக அரங்கில் தலை நிமிர செய்வது எப்படி? என்பதை தான் நாம் பார்க்க வேண்டும்.


2009 எவிடன்ஸ் அமைப்பு என்கிற அமைப்பு தமிழகத்தில் உள்ள 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் நடத்திய சர்வேயில் ஏழாயிரம் கிராமங்களில் இன்றும் தீண்டாமை இருக்கின்றது என்று எவிடன்சோடு அந்த எவிடன்சோடு அந்த எவிடன்ஸ் அமைப்பு ரிப்போர்ட் கொடுத்தது. பரமக்குடி, முதுகுளத்தூர் போன்ற கிராமங்களை தீண்டாமை கொடுமைக்கு உதாரணமாக சொல்லலாம்.


தமிழகத்தில் இந்த 21 ம் நூற்றாண்டிலும் தொடர்ந்து கொண்டிருக்கும் தீண்டாமை கொடுமைக்கு எதிராக பொங்காதவர்கள். ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மட்டும் இப்படி பொங்குகிரார்களே.


நான் தெரியாமல் தான் கேட்கிறேன். தப்பு, தப்பு தெரிந்தே தான் கேட்கிறேன். தமிழர்களின் மானம். வெறும் இந்த ஜல்லிக்கட்டில் மட்டும் தான் இருக்கின்றதா.
—  நான் பாரத மைந்தன்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...