Saturday, January 23, 2016

ஐஸ்வரியம் தருவார் ஸ்ரீசௌந்தர பாண்டீஸ்வரர்!



  திருநெல்வேலியில் இருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ளது மேலக்கரு வேலங்குளம். இங்கே சௌந்தரபாண்டீஸ்வரர் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டிருக்கிறார் ஈசன். அம்பாளின் பெயர் ஸ்ரீகோமதி அம்பாள்!

  கோயிலின் மகா மண்டபத்தில், பலகை ஒலியுடன் கூடிய சிறிய தூண்கள் பிரமிக்க வைக்கின்றன. அங்கே கல்தூண் ஒன்று சுழல்வது போல் அமைக்கப் பட்டிருப்பது கட்டட நுணுக்கத்திற்குச் சான்றாகத் திகழ்கிறது. யாளி சிலையின் வாயில் ஒரு கல் உருண்டை, சுழல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  பதஞ்சலி முனிவர், வியாக்ரபாத முனிவர், புலிப்பாணி சித்தர் முதலானோர் இங்கு தவம் செய்து சிவதரிசனம் செய்துள்ளனர். இதைக் குறிக்கும் வகையில் இவர்களுக்கு சிலைகளும் இங்கு உள்ளன!

 மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திர நாளில், ஸ்ரீசிவகாமி அம்மைக்கும் ஸ்ரீநடராஜருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு தரிசித்தால், சகல சௌந்தர்யங்களுடன் இனிதே வாழலாம் என்பது ஐதீகம்!

- வி.ராம்ஜி

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...