Friday, January 8, 2016

காரையாறு ஸ்ரீசொரிமுத்தையனார் கோயில்



  நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், பாபநாசம் வழியே செல்லும் பாதையில், சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது காரையாறு எனப்படும் சிங்கம்பட்டி. பொதிகைமலையில் அமைந்துள்ள அற்புதமான ஆலயம் இது!

   வணிகர்கள், பொருட்களை மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு செல்லும் போதெல்லாம், வழியில் உள்ள பாறை ஒன்றில் குளம்படி பட்டு, ரத்தம் பெருகியது. இது ஒவ்வொரு முறையும் தொடர்ந்து நிகழ... எல்லா வணிகர்களும் அந்த இடத்துக்கு வந்து என்னவாக இருக்கும் என யோசித்தனர். அப்போது, குருதி வருகிற பாறைக்குக் கீழே மகாலிங்க சுவாமி இருக்கிறார். அவருக்கும் கூடவே சொரிமுத்தையன், சங்கிலிமாடன், பிரம்மராட்சஷி முதலானவர்களுக்கும் சிலை அமைத்து வழிபடுங்கள்’ என அசரீரி கேட்டது. அதையடுத்து, இங்கே ஆலயம் அமைத்து வழிபடலானார்கள் என்கிறது ஸ்தல வரலாறு.

  சிவ பார்வதியின் திருமணத்தின் போது, தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் என அனைவருக்கும் வடக்கே வந்து சேர, அதனால் தெற்கு தாழ்ந்தது. இதை சமன் செய்ய, சிவபெருமான் அகத்திய முனிவரை அங்கே அனுப்பினார். இங்கே, இப்போது கோயில் உள்ள இடத்தில் தங்கி, நித்ய அனுஷ்டானங்களைச் செய்தார் அகத்தியர். அப்போது சாஸ்தாவான அய்யனார், இங்கு சூட்சும வடிவில் இருப்பதை உணர்ந்தார். அவரையும் சேர்த்து வணங்கினார். அப்போது, அங்கே வானில் இருந்து மலர் சொரிந்தது. இதனால், மலர் சொரி முத்தையனார் என பெயர் அமைந்ததாக புராணம் தெரிவிக்கிறது.

  சக்தி வாய்ந்த அய்யனார். இங்கு வந்து வேண்டிக் கொண்டால், கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்!

  கோயில் நேரம் :
  காலை 6 முதல் 10 மணி வரை.
  மாலை 5 முதல் 7 மணி வரை.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...