Saturday, April 27, 2013

அம்மா !ஆதரி .






காமனை  எரித்த  கண்ணால்
          ஞானச்சேய் பயந்தளித்த 
சோமேசன்  ப்ரிய சுந்தரி!...மாதுரி !
         அபயந்தந்தெனை ஆதரி.

கால்விரலை வாய் சுவைக்க , 
          கைவிரலோ மலை சுமக்க
கோலம்பல காட்டும் அரி ...சோதரி!
         சரணளித்தெனை  ஆதரி  !

பாமர தாசனுக்குக்  
        கவிபாடும் வரமளித்த 
 ஷ்யாமளே !சாகம்பரி !...சங்கரி !
        புகல்தந்தெனை ஆதரி!

ஊமைக்குப் பேச்சருளி 
            ஐந்நூறு பாடவைத்த 
காமாக்ஷி!கருணாகரி!...கடையனின் 
           பாமலரும் ஸ்வீகரி!

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...