Saturday, April 20, 2013

பால் அபிஷேகம்



சகஸ்ர லிங்க மூர்த்திகளுக்கு பசுவின் பால் அபிஷேகம் சிறப்புடையது. பால் கறந்து சூட ஆறும் முன் அபிஷேகம் செய்வதால் விசேஷமான பலன்கள் கிட்டும். எக்காரணம் கொண்டும் பாக்கெட் பால்அபிஷேகம் எந்த தெய்வ மூர்த்திக்கும் ஏற்புடையது அல்ல. பக்தர்கள் இதை உணர்ந்து ஆவண செய்யும்படிக் கேட்டுக் கொள்கிறோம். பலரும் எங்களுக்குக் கிடைப்பது பாக்கெட் பால்தான், அதனால் அதைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம் என்று கூறிவது உண்டு. படிப்பிற்காக, சம்பாதிப்பதற்காக நூற்றுக் கணக்கான மைல்கள் பயணம் செய்யத் தயங்குவதில்லையே. இதே போல தங்களுக்குத் தெரிந்தவர்கள் எங்காவது மாடு வைத்திருந்தால் அவர்களைக் கொண்டு அருகில் இருக்கும் இறை மூர்த்திகளுக்கு கறந்த பாலை வாங்கி அபிஷேகம் செய்யச் சொல்லலாம் அல்லவா? எதற்கும் மனம் இருந்தால் மார்கம் உண்டு.

மேலும் கன்றுள்ள மாட்டின் பால்தான் அபிஷேகத்திற்கு உகந்தது. மாடு கன்று குட்டிக்கு வேண்டும் அளவு பால் ஊட்டியபின் கறந்த பாலைத்தான் சுவாமியின் அபிஷேகத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு ஏகாதசி திதி அன்றும் மனிதர்களின் உடலில் ஏக கங்கா என்ற ஒரு திவ்ய நீர் சுரக்கும். கங்கைக்கு இணையான தீர்த்தம் இது. ஏகாதசி அன்று நீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து இறைவனை வழிபடும் போது இந்த ஏக கங்கா நம் உடலில் உள்ள 72000 நாடி நாளங்களில் பாய்ந்து உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும், மன, உள்ள வளத்தையும் நல்கும்.

இதே போல பசுவின் உடலிலும் சுதாம கங்கா என்ற ஒரு திவ்ய நீர் சுரக்கும். இதை தர்ம கங்கா என்றும் கூறுவதுண்டு. இந்த சுரப்பு நீரில் 22 விதமான அமிர்தச் சுவைகள் உண்டு. உலகில் வேறு எந்த மூலிகையிலும், காய், கனிகளிலும் இந்த அமிர்தச் சுவையைக் காண முடியாது. பசுவின் மடியில் உற்பத்தியாகும் இந்த தர்ம கங்காவை கன்றுக் குட்டிகள் முட்டி, முட்டிதான் அதைப் பாலில் சேர்க்கும். எனவே கன்றுக் குட்டிகள் தாயின் மடியை முட்டிப் பால் குடித்தால்தான் நாம் இந்த அமிர்த சக்திகளை பால் மூலம் பெற முடியும். இதைத்தான் சுந்தரரும் கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி என்று பக்தர்கள் இறை அமிர்தத்தை பெறும் முறையாகச் சுட்டிக் காட்டுகின்றார்.

இத்தகைய தர்ம கங்காமிர்தம் செறிந்த பாலே சகஸ்ர லிங்க மூர்த்திக்கு ஏற்புடையது.  எனவே முடிந்த போதெல்லாம் கன்றுக் குட்டிகள் தங்கள் தாய்ப் பசுவிடம் வேண்டிய அளவு பாலை ஒரு நாள் காலையிலிருந்து மாலை வரை அருந்தும் தானத்தை ஏற்றுச் செய்வது மிகவும் சிறப்புடையதாகும். நிரந்தர செல்வத்தைப் பெறக் கூடிய பூஜை முறைகளுள் இத்தகைய மடிப்பால் தானமும் ஒன்றாகும்.

கன்று குடித்தால் பசு தரும் பால் அளவு குறைந்து விடும் என்ற தவறான கருத்தை இனியாவது மக்கள் மாற்றிக் கொண்டால் அது சமுதாயத்திற்கு நன்மை தரும். இன்று சமுதாயத்தில் பெருமளவில் காணப்படும் கடுமையான இரத்த சோகை நோய்க்கு இவ்வாறு கன்றுகளுக்கு பால் கொடுக்காமல் பாலைப் பயன்படுத்துவதும் ஒரு காரணம் என்பதை நினைவில் கொள்ளவும்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...