Saturday, April 27, 2013

மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் மட்டும் (ரிஷப ராசி)

இது செவ்வாய் கிரகத்திற்கு உரிய நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோஹிணி
5. திருவாதிரை
6. பூசம்
7. உத்திரம்
8. ஹஸ்தம்
9. சுவாதி
10. விசாகம்
11. அனுஷம்
12. கேட்டை
13. மூலம்
14. பூராடம்
15. உத்திராடம்
16. திருவோணம்
17. சதயம்
18. பூரட்டாதி
19. உத்திரட்டாதி
20. ரேவதி
ஆகிய 20 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் சித்திரை 3 & 4ஆம் பாதங்கள் துலாம் ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் ரிஷபத்திற்கு ஆறாம் இடம் துலாம் வீடு. துலாமிற்கு எட்டாம் வீடு ரிஷப வீடு. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு மூலம் மற்றும் பூராடம், மற்றும் உத்திராடம் முதல் பாத நட்சத்திரங்களுக்கு உண்டு. அது தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்குத் தனுசு எட்டாம் வீடு. தனுசுவிற்கு ரிஷபம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு அஸ்விணி, பரணி மற்றும் கார்த்திகை முதல் பாத நட்சத்திரங்களுக்கும் உண்டு. அது மேஷ ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும். ரிஷபத்திற்கு மேஷம் பன்னிரெண்டாம் வீடு. மேஷத்திற்கு ரிஷபம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அதையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 14 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

சித்திரை, அவிட்டம் ஆகிய 2 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் மிருகசீரிஷம் ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திரத்திற்கு மத்திமமான பொருத்தம் ( average) ஆகும் சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திர வரன் கிடைத்தால் தெரிவு செய்யலாம்

அதுபோல புனர்பூசம். ஆயில்யம் ஆகிய 2 நட்சத்திரங்களும் இந்த நட்சத்திரத்திற்கு மத்திமமான பொருத்தம் ( average) உடையவை ஆகும். சிறப்பான பொருத்தம் கிடைக்காமல் அல்லாடுபவர்கள், இந்த நட்சத்திர வரன் கிடைத்தால் தெரிவு செய்யலாம்

மகம், பூரம், ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது!

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...